“பாஜக எங்களை மிரட்டியது”
பிரேமலதா குற்சென்னை, ஏப்.4- திருவள்ளூர் தொகுதியில் அதி முக கூட்டணியில் தேமுதிக சார்பில் முன்னாள் எம்எல்ஏ கு.நல்லதம்பி போட்டி யிடுகிறார். அவரை ஆதரித்து பொன் னேரியில் நடந்த பிரச்சாரத்தில் அக்கட்சி யின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.
அப்போது, “அதிமுக அலுவலகத் தில் கூட்டணி ஒப்பந்தம் போடும்வரை பாஜகவிடம் இருந்து எவ்வளவோ நிர்ந் பந்தங்கள் வந்தன. எல்லாவற்றையும் தூக்கியெறிந்து தைரியமாக ஜெய லலிதா மாதிரி முடிவெடுத்தேன். பாஜக விடம் இருந்து எத்தனையோ நிர்பந்தங் கள் வந்தன. எங்களின் வங்கி கணக்கு களை எல்லாம் முடக்குவோம் என பய முறுத்தினார்கள். நாங்கள் பனங்காட்டு நரி. எந்த சலசலப்புக்கும் அஞ்ச மாட் டோம். எத்தனை சோதனைகள் வந்தா லும் பயப்படப்போவது இல்லை” என் றார்.
அதிமுக முன்னாள் எம்எல்ஏ உறவினர் வீட்டில் பணம்
கட்டுக்கட்டாக ரூ. 40 லட்சம் சிக்கியது
திருப்பத்தூர், ஏப்.4- திருப்பத்தூர் அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே.ஜி.ரமேஷ். இவருடைய உற வினர் நவீன் குமார் (42). இவர் திருப் பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி எதிரே உள்ள காந்தி பேட்டையில் வசித்து வருகிறார். திருப்பத்தூர் பேருந்து நிலை யத்தில் டிஜிட்டல் ஸ்டுடியோ பேனர் கடை வைத்துள்ளார். மேலும் திருமண மண்டபம் பைனான்ஸ் உள்ளிட்ட தொழில்களிலும் ஈடுபட்டு வருகிறார். புதன்கிழமை (ஏப்.3) இரவு வருமான வரித்துறை அதிகாரிகள் நவீன் குமார் வீட்டிற்குள் புகுந்து ஆவணங்களை கைப்பற்றி விசாரித்தனர். மேலும் வீட் டில் கட்டுக்கட்டாக ரூ.40 லட்சம் வரை பணம் கைப்பற்றியதாக கூறப்படுகிறது
தமிழ்நாட்டின் மின்தேவை 19,413 மெகாவாட் ஆனது
சென்னை, ஏப்.4- தமிழ்நாட்டின் மின்தேவை முன்னெப் போதும் இல்லாத அளவாக புதனன்று 19,413 மெகாவாட்டை எட்டியதாக டான் ஜெட்கோ தெரிவித்துள்ளது. புதனன்று பிற்பகல் 2.30 முதல் 3 மணி அளவில் தமிழ்நாட்டின் மின்தேவை 19,413 மெகா வாட்டை எட்டியுள்ளது என்றும் டான் ஜெட்கோ குறிப்பிட்டுள்ளது.
சிபிஎம் தலைவர்கள் இன்றைய பிரச்சாரம்
கே.பாலகிருஷ்ணன்
மாநிலச் செயலாளர்
தென்சென்னை (வேளச்சேரி)
ஜி.ராமகிருஷ்ணன்
அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்
திருவண்ணாமலை
உ.வாசுகி
மத்தியக்குழு உறுப்பினர்
திண்டுக்கல்
தோழர் அ.சவுந்தரராசன்
மூத்த தலைவர் - சிபிஐ(எம்)
ஸ்ரீபெரும்புதூர் (போரூர்)
தமிழகத்தில் வெயில் 14 இடங்களில் சதமடித்தது
சென்னை, ஏப்.4- தென்னிந்திய பகுதிகளின் மேல் வளி மண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் கார ணமாக தமிழகத்தில் வியாழக்கிழமை யன்று 14 இடங்களில் வெயில் 100 டிகிரி யைத் தாண்டியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக ஈரோட்டில் 106.16 டிகிரி வெயில் கொளுத்தியது. பரமத்தி வேலூர் 105.8. தருமபுரி 103.64, திருச்சி 103.46. மதுரை விமான நிலையம் 103.1, திருப்பத்தூர் 102.92, மதுரை நகர் 102.56, சேலம் 102.56, நாமக்கல் 102.2, வேலூர் 102.02, திருத்தணி 101.84, கோவை 101.12, சென்னை மீனம்பாக்கம் 101.76, தஞ்சாவூர் 101.04 டிகிரி என வெயில் பதிவாகி யுள்ளது.
செந்தில் பாலாஜிக்கு 31 ஆவது முறையாக காவல் நீட்டிப்பு
சென்னை, ஏப்.4- பணப்பரிமாற்ற வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச் சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் தொடர்ச்சியாக நீட்டிக்கப்பட்டு கொண்டே வருகிறது. அதன்படி, செந் தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் ஏப்ரல் 4-ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர் படுத்தப்பட்டார். வழக்கை விசா ரித்த நீதிபதி, அமைச்சர் செந்தில் பாலாஜி யின் காவலை ஏப்ரல் 15 வரை நீட்டித்து உத்தரவிட்டார். இதன் மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 31ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.