tamilnadu

img

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மோடி அரசு சேவகம் செய்கிறது

புதுச்சேரி, ஜூலை 28- கார்ப்ரேட் நிறுவனங்க ளுக்கு மோடி அரசு சேவகம் செய்கிறது என்று சிஐடியு மாநிலச் செயலாளர் பி.கருப்பையன் சாடினார். சிஐடியு புதுச்சேரி பிரதேச 11ஆவது மாநாடு சித்தன்குடியில் உள்ளவி.பி.சிந்தன் நினைவரங்கில் பிரதேசத் தலைவர் கே.முரு கன் தலைமையில் நடை பெற்றது. துணைத் தலைவர் ஆர்.ராஜாங்கம் கொடி ஏற்றினார். சிஐடியு மாநிலச் செயலாளர் பி.கருப்பையன் மாநாட்டை துவக்கி வைத்து பேசியதாவது: எண்ணற்ற உயிர்களை பலிகொடுத்து போரா டிப்பெற்ற உரிமைகளை மத்திய பாஜக அரசு பறித்து வருகிறது. கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு சேவகம் செய்யும்மோடி அரசு, அவர்கள் கட்டவேண்டிய 65 விழுக்காடு வரியை25 விழுக்காடாக குறைத்து ள்ளது. ஆனால் ஏழை, எளியோர் பயன்படு த்தும்பொருட்க ளுக்கு  வரிமேல் வரிபோட்டு வதைக்கிறது. இன்றைக்கு வேலை வாய்ப்புகளை கொடுக்கக்கூடிய பொது த்துறை நிறுவனங்களை தனியாருக்கு அடிமாட்டு விலைக்கு விற்பனை செய்கிறது. அதில் தற்போது ரயில்வே துறையை அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு தாரை வார்த்துள்ளது. நாளை நாம் அன்றாடம் பயன்படுத்தும் சாலையைக்கூட அம்பானி, அதானிகளுக்கு தாரை வார்த்து விடுவார்கள். இப்படி பொதுத்துறை நிறுவனங்களை தாரைவார்த்துவிட்டு இடஒதுக்கீடு தருகிறோம் என்றுதம்பட்டம் அடிக்கிறது மத்திய  அரசு. எனவேதான் இந்திய தொழிலாளிவர்க்கம் மத்திய அரசின் கொள்கைகளை எதிர்த்து  வீரம்செரிந்த போராட்டத்தை நடத்த வேண்டும் என்றார். சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் வெ.பெருமாள், விவசாயிகள் சங்க பிரதேசச் செயலாளர் வெ.சங்கர், விவசாயத் தொழிலாளர் சங்கச் செயலாளர் உலக நாதன் ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி பேசினார்கள். செய லாளர் சீனுவாசன்வேலை அறிக்கையையும், பொரு ளாளர் ஆவணியப்பன் வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். முன்னதாக மாநாட்டின் துவக்கநிகழ்ச்சியாக பழைய பேருந்து நிலையம்அண்ணா சிலையிலிருந்து பேரணி நடைபெற்றது. சிஐடியு தமிழ் மாநில துணைத்தலைவர் இ.பொன்முடி பேரணியை துவக்கி வைத்தார். இதில் குணசேகரன், பிரபுராஜ், மதிவாணன், ராமசாமி, மது, கலியமூர்த்தி, ரவிச்சந்திரன், பச்சமுத்து உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.