tamilnadu

செல்போன்களில் ஆபாசபடங்கள் பரவுவதை தடுக்க நடவடிக்கை

சென்னை, ஜூன் 21- செல்போன்களில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் ஆபாச படங்கள் பரவுவதை தடுக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. சேலத்தை சேர்ந்த சிறுமி காணாமல் போனது தொடர்பாக அவரது பெற்றோர் உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை கடந்த வாரம் தாக்கல் செய்தனர்.இதனை விசாரித்த நீதிபதிகள், நடிகைகள்  காணாமல் போனால் தான் கண்டு பிடிப்பீர்களா? மாயமான சிறுமியை  ஏன் கண்டுபிடிக்கவில்லை என்று கேள்வி எழுப்பினர்.தமிழகத்தில் சிறுமி கள் திருமணமான ஆண்களுடன் தொடர்பில் இருப்பது சமீப காலமாக  அதிகரித்து உள்ளது. முறையற்ற உறவுகளால் ஏற்படும் கொலைகள் அதிகரித்துள்ளன. அது தொடர்பான விவரங்களை காவல்துறையினர் நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்ற உத்தரவிட்டிருந்தனர். இதையடுத்து இந்த வழக்கு விசாரனை வெள்ளியன்று உயர்நீதி மன்றத்தில் நடைபெற்ற போது காவல்துறை அதிகாரி மகேஸ்வரன் மனு  ஒன்றை தாக்கல் செய்தார். அதில் சென்னை மற்றும் தமிழகம் முழு வதும் கடந்த 2009ஆம் ஆண்டில் இருந்து நடைபெற்ற முறையற்ற உற வால் ஏற்பட்ட கொலைகள் தொடர்பான விவரங்கள் இடம்பெற்றி ருந்தன. கடந்த 2009ஆம் ஆண்டு 106 பேரும், 2010-ல் 125 பேரும்,  2011-ல் 132 பேரும், 2012-ல் 126 பேரும், 2013-ல் 122 பேரும், 2014-ல்  134 பேரும் முறையற்ற உறவால் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரி விக்கப்பட்டிருந்தது.இதேபோல 2016, 2017, 2018ஆம் ஆண்டுகளிலும் 100 க்கும் மேற்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த ஆண்டு இதுவரையில் 47 பேர் கொலையுண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. சென்னையிலும் எத்தனை பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது பற்றிய பட்டியலும் இடம்பெற்றிருந்தது. கடந்த ஆண்டு சென்னை யில் அதிக பட்சமாக 24 பேர் முறையற்ற உறவால் தகராறில் கொலை  செய்யப்பட்டிருப்பதும் இதன்மூலம் தெரிய வந்தது.இதனை படித்து பார்த்த நீதிபதிகள் கள்ளத்தொடர்பு மற்றும் கொலைகள் அதிகரிப்பது  தொடர்பாக தங்களது வேதனையை வெளிப்படுத்தினர். 9 மாத  குழந்தை கூட கற்பழித்து கொலை செய்யப்படுகிறது. செல்போனில் பரவும் ஆபாச படங்களும் இது போன்ற குற்றங்கள் பெருக காரணம் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், இதுபோன்ற கொலைகளுக்கான கார ணங்கள் குறித்தும் ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசும் போலீசாரும் இணைந்து செல்போனில் பரவும் ஆபாச  படங்களை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டனர். உயர்நீதிமன்றம் கேட்டிருந்த பல்வேறு கேள்விகளுக்கு மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்கவில்லை. அவற்றுக்கெல்லாம் விரைவில்  பதில் சொல்ல வேண்டும் என்று கூறி வழக்கு விசாரணையை 2 வாரங்க ளுக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.