tamilnadu

img

​​​​​​​ரகுமான்கான் மறைவு - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்

முன்னாள் அமைச்சர் ரகுமான் கான் மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலத்தலைவர் கே.பாலகிருஷ்ண்ன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது
திராவிட முன்னேற்ற கழகத்தின் உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ரகுமான்கான் மறைந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றோம். அவரது மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மாணவப்பருவத்திலேயே திமுகவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு,  திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டவர்.  திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர்களில் ஒருவர், சிறந்த பேச்சாளர், 5 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், வருவாய்த்துறை மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும் இருந்து சிறப்பாக பணியாற்றியவர். ரகுமான்கான் அவர்களை  இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், திமுகவினருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறோம்.