tamilnadu

தமிழகத்திற்கு எந்த நன்மையும் செய்யாத மோடி எந்த முகத்துடன் வருகிறார்?

சென்னை, ஏப்.9- தமிழ்நாட்டிற்கு எந்த நன்மை யும் செய்யாத பிரதமர் நரேந்திர மோடி, எந்த முகத்துடன் வாக்கு கேட்டு வருகிறார்? என்று திமுக  தலைவரும், தமிழக முதல்வரு மான மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், வெள்ளத்தின் போது உதவுவதற்கு வராத மோடி, பறவை கள் சீசனுக்கு வருவது போல, தேர்  தல் சீசனுக்கு மட்டும் வருவாரா? என்றும் கேட்டுள்ளார்.

மதுரையில் நடைபெற்ற ‘இந் தியா’ கூட்டணியின் தேர்தல் பரப்பு ரைப் பொதுக்கூட்டத்தில், மதுரை  மக்களவைத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பா ளர் சு.வெங்கடேசனுக்கு சுத்தியல்  அரிவாள் நட்சத்திரம் சின்னத்தி லும், காங்கிரஸ் கட்சியின் சிவ கங்கை தொகுதி வேட்பாளர் கார்த்தி  சிதம்பரத்திற்கு கை சின்னத்திலும்  வாக்கு சேகரித்து சிறப்புரையாற்றி னார். அப்போது முதல்வர் மு.க. ஸ்டாலின் மேலும் பேசியதாவது:

எந்த நல்ல திட்டத்தை தமிழகத்திற்கு மோடி தந்தார்?
கடந்த பத்தாண்டு காலமாக, தமிழ்நாட்டு மக்களை மதித்து தமிழ்  நாட்டிற்கு என்று எந்த சிறப்புத்  திட்டத்தையும் செய்து கொடுக்காத  பிரதமர் மோடி, இப்போது வாக்கு  கேட்டுத் தமிழ்நாட்டிற்கு வந்தி ருக்கிறார். 

தமிழ்நாட்டிற்குச் சிறப்புத் திட்டங்கள் செய்து கொடுத்துவிட்டு வந்திருக்கிறாரா? இல்லை! இங்கு  பக்கத்து மாவட்டங்கள் வெள்ளத்  தில் தவித்தார்களே… அவர்களுக்கு  உதவி செய்துவிட்டு வந்திருக்கி றாரா? இல்லை! எந்த முகத்துடன், மோடி தமிழ்நாட்டிற்கு வருகிறார்? 

இவர் தமிழ்நாட்டை மட்டும் இப்  படி வஞ்சிக்கவில்லை. எதிர்க்கட்சி  ஆளும் அனைத்து மாநிலங்களை யும் வஞ்சிக்கிறார்!

எதிர்க்கட்சி மாநிலங்களை நாசமாக்குகிறார்
பக்கத்து மாநிலம் கேரளத்தில் மக்கள் நலத் திட்டங்களுக்குக் கடன் வாங்குவதற்குக்கூட, உச்ச  நீதிமன்றத்திற்குச் செல்லும் நிலை மையை உருவாக்கியிருக்கிறார். கர்நாடகாவும் வறட்சி நிவாரணம் கேட்டு, உச்சநீதிமன்றக் கதவு களைத் தட்டியிருக்கிறார்கள். அது மட்டுமல்ல, அந்த இரண்டு மாநில  முதல்வர்களும் தில்லியில் சாலை யில் போராடும் அவல நிலையை ஏற்படுத்தினார் பிரதமர். மேற்கு  வங்கத்திற்கும் இதே நிலைமைதான்!

மகாராஷ்டிராவில் என்ன நடக்கி றது? குதிரை பேரம் நடத்தி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி னார். ஆட்சியைக் கலைத்தார். ஆளும் கட்சியை உடைத்து, இப் போது அந்த மாநிலத்தையும் நாச மாக்கிவிட்டார்!

இ.டி., ஐ.டி., சிபிஐ,  ஆளுநர் மூலம் தொல்லை
அடுத்து, ஜார்க்கண்ட் மாநிலத்  தில் என்ன நிலைமை? பழங்குடி யின முதலமைச்சரான ஹேமந்த் சோரன் அவர்களைக் கைது செய்தார்!

தில்லியிலும். பஞ்சாப்பிலும் என்ன செய்தார்? அங்கு ஆளும்  ஆம் ஆத்மி கட்சிக்கு ஆளுநர்களை  விட்டுத் தொல்லை கொடுக்கிறார். தில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரி  வாலைத் தேர்தல் அறிவித்ததற்குப் பிறகு கைது செய்தார்.
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநி லங்களில் மட்டும், அமலாக்கத் துறை (E.D.) – வருமான வரித்துறை  (I.T.) – மத்திய புலனாய்வுக் கழகம்  (C.B.I.) – மற்றும் ஆளுநர்களை வைத்துத் தொல்லை கொடுப்பார். இதுதான் மோடி இந்தியா!

சத்யபால் மாலிக்  நிலைமை என்ன ஆனது?

இவரை எதிர்த்து யாராவது பேசினால் என்ன நடக்கும்? சமீ பத்திய உதாரணம், ஜம்மு காஷ்மீர்  மாநிலத்தின் ஆளுநராக இருந்த சத்யபால் மாலிக்! அவர் என்ன சொன்னார்! 2019-இல் நடந்த புல் வாமா தாக்குதலை, அரசியல் ஆதாயத்திற்காக எப்படியெல்லாம் பயன்படுத்தினார்கள், மோடிக்கு ஊழலை ஒழிக்கும் எண்ணம் இல்லை; ஊழல்வாதிகள் அவர் கூடவே  இருப்பதால், அவர்கள் மேல்நட வடிக்கை எடுக்க மாட்டார் என்று  விளக்கமாக ஒரே ஒரு பேட்டிதான் கொடுத்தார். உடனே அவர் வீட்டில்  சிபிஐ (C.B.I.) ரெய்டு! எவ்வளவு மலிவான அரசியல்?

மல்யுத்த வீராங்கனைகள், மணிப்பூர் பெண்கள் கண்ணீர்
பெண் சக்தி, பெண்கள் பாது காப்பு பற்றி, இப்போது தொடர்ந்து  பேசும் பிரதமர், பாஜக எம்.பி.  பிரிஜ் பூஷனால் பாலியல் துன்பு றுத்தலுக்கு ஆளான மல்யுத்த  வீராங்கனைகள் கண்ணீர் விட்ட போது, வாய் திறக்கவில்லையே ஏன்?

குஜராத்தில் பில்கிஸ் பானு  பலாத்கார வழக்கின் குற்றவாளி கள் விடுதலை செய்யப்பட்டபோது, பெண் சக்தி மேல் பிரதமர் மோடிக்கு அக்கறை வந்ததா?

மணிப்பூர் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரத்தை, மவு னமாக ஏன் வேடிக்கை பார்த்தார்?  ஒரு தடவையாவது மணிப்பூ ருக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு ஆறுதல் கூறினாரா?

அதுமட்டுமல்ல, ஜம்மு -காஷ்மீ ரில் 8 வயது குழந்தையைக் கோயி லில் வைத்து வன்புணர்வு செய் தார்களே? அந்தக் குற்றவாளிக்கு ஆதரவாக, இரண்டு பாஜக அமைச்சர்கள் ஊர்வலம் சென் றார்களே? இதற்குக் கண்டனம் எழுந்த உடனே, அவர்கள் என்ன  கூறினார்கள்? கட்சித் தலைமை தான் எங்களை அனுப்பி வைத்தது என்று கூறிய அவர்களை, மோடி தட்டிக் கேட்டாரா?

தலித் பெண்களுக்கு வல்லுறவுக் கொடுமை
உத்தரப் பிரதேசத்தில் உன் னாவ் ஞாபகம் இருக்கிறதா? வேலை கேட்டுச் சென்ற இளம் பெண்ணை, பாஜக எம்.எல்.ஏ.  குல்தீப் சிங் வன்புணர்வு செய்தார்.  இதைப் புகாராக அந்தப் பெண் சொல்லக் கூடாது என்று, குல்தீப் பின் சகோதரரும், நண்பர்களும் சேர்ந்து அவரைக் கடத்தி மயக்க மருந்து கொடுத்து நாள்கணக்கில் கும்பல் பாலியல் வல்லுறவு செய் தார்கள். காப்பாற்றச் சென்ற தந்  தையை போலி வழக்கு போட்டு  சிறையிலேயே வைத்து அநியாய மாகக் கொன்றார்களே? நியாயம்  கிடைக்காத விரக்தியில், உத்த ரப்பிரதேச முதல்வர் யோகி வீட்டுக்கு முன்பு, அந்த பெண் தீக்குளிக்க முயற்சி செய்தார்கள்! அதற்குப் பிறகும் கூட அந்தப் பெண்ணை வண்டி ஏற்றிக் கொல்ல  முயற்சி நடந்தது. அதில் அவர்கள்  அத்தை இறந்தார்கள்! இதையெல்  லாம் வேடிக்கை பார்த்தது யார்? பிரதமராக இருக்கக் கூடிய மோடி தான்!

மோடி வாய் திறந்து கண்டிக்காதது ஏன்?
ஹத்ராஸ் மறந்து போனதா? அப்பாவி தலித் பெண் ஒருவர், வன்புணர்வு செய்யப்பட்டு இறந்  தாரே! அவரின் உடலை பெற்றோர்  சம்மதம் இல்லாமல், பெட்ரோல் ஊற்றிப் போலீசே எரித்தார்களே? பாதிக்கப்பட்ட குடும்பத்தைப் பார்த்துஆறுதல் சொல்லக்கூட சகோதரர் ராகுல் காந்தி, பிரி யங்கா காந்தி ஆகியோருக்கு அனு மதி மறுத்தார்களே? இப்படிப்பட்ட காட்டாட்சிதான், பாஜக ஆட்சி!

பெண்களுக்குச் சுதந்திரம் கொடுக்கக் கூடாது என்று பாஜக வை சேர்ந்த முதலமைச்சர் யோகி பேசினார். இதையெல்லாம் மோடி  தடுத்தாரா?

மோடியை தமிழக மக்கள்  ஏற்க மாட்டார்கள்
மோடி இந்த நாட்டிற்குச் செய் தது என்ன? ஒருதாய் மக்களாக வாழும் மண்ணில் மதவெறியை விதைத்து பிளவுபடுத்தினார். மக்களுக்காகப் பேசுகிறவர்களைச் சிறையில் தள்ளி ரசித்தார்! எழுத் தாளர்கள் கவுரி லங்கேஷ் – கல்புர்கி கொல்லப்பட்டதை மவு னமாக வேடிக்கை பார்த்தார்! மத வெறியர்களின் வன்முறையையும் – கொலைகளையும் – தாராளமய மாக்கினார்! இப்படிப்பட்டவரை, தமிழ்நாட்டு மக்கள் ஒரு நாளும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்! அது ஜூன் 4-ஆம் தேதி அவருக்குத் தெரியத்தான் போகிறது!

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டார்.