சென்னை, ஏப்.11- ராம நவமியை முன்னிட்டு, ஏப்ரல் 12 முதல் 17 வரை, மலப்புரம் வண்டூரில் இருந்து கன்னியாகுமரி மாவட் டம் களியக்காவிளை வரை யாத்திரை செல்ல, கேரளா வைச் சேர்ந்த ஸ்ரீஆஞ்சநேயம் அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளரான திலீப் நம்பியார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், தமிழ்நாட்டின் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்கள் வழி யாகச் சென்று யாத்திரை செல்ல அனுமதி கோரியதாக வும், ஆனால் சட்டம் - ஒழுங்கைக் காரணம் காட்டி அதனை காவல்துறை நிராகரித்துள்ளதாகவும் குறிப் பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பு விசார ணைக்கு வந்தது, அரசுத் தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன் ஆஜராகி பதிலளித்தார். கடந்த முறை ஒரு மாவட்டத்தில் மட்டுமே யாத்திரை நடத்தப்பட்ட நிலையில், இந்த முறை 11 மாவட்டங்களில் யாத்திரைக்கு அனுமதி கோரப்பட்ட தாகவும் அரசுத் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து, 11 மாவட்டங்களில் யாத்திரை செல்ல அனுமதி மறுத்தது நியாயமானது என தெரி வித்த நீதிபதி, ஏதாவது ஒரு மாவட்டத்தில் யாத்திரை நடத்திக் கொள்ளலாம் என கூறினார்.
இதுபற்றி பரிசீலித்து இரண்டு நாட்களில் முடி வெடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கை யும் முடித்து வைத்தார்.