சென்னை, மார்ச் 13 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் ஆர். செல்லசுவாமி மற்றும் முஞ்சிறை வட்டாரக்குழு உறுப்பினர் அனீஷ் ஆகி யோர் மீது எவ்வித காரணமுமின்றி தாக்கு தல் நடத்திய நித்திரவிளை காவல் ஆய்வா ளர் இக்னோஸ் குமார் மீது வழக்குப் பதிவு செய்து - துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வ ருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் எழுதியுள்ள கடிதம்:
உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பெயர் புறக்கணிப்பு
கன்னியாகுமரி மாவட்டம், முஞ்சிறை வட்டம், நம்பாளி சந்திப்பில் 12.03.2024 அன்று உயர் கோபுர மின்விளக்கு திறப்பு விழா நடைபெற்றது. அப்போது அங்கு திறக்கப்பட்ட கல்வெட்டில் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் பெயர் மட்டுமே இருந்துள்ளது. சம்பந்தப்பட்ட கொல்லங் கோடு நகராட்சி தலைவர், துணைத் தலை வர் மற்றும் திறக்கப்பட்ட பகுதியின் கவுன்சி லர் ஆகியோர் பெயரையும் வைக்க வேண்டு மென பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
அப்போது, திடீரென அங்கிருந்த அல் அமீன், சதீஷ் மற்றும் ஷாகுல் ஹமீது ஆகியோர் எங்கள் கட்சியின் முஞ்சிறை வட்டாரக்குழு உறுப்பினர் அனீஷைக் கடுமையாக தாக்கியுள்ளனர். அப்போது அங்கு வந்த காவல் ஆய்வாளர் இக்னோஸ் குமார் என்பவரும் அனீஷை கடுமையாக தாக்கியுள்ளார்.
இழிவாகப் பேசி தாக்குதல்
இதனைக் கண்டு சமாதானப்படுத்தச் சென்ற எங்கள் கட்சியின் கன்னியாகுமரி மாவட்ட செயலாளரும், மாநிலக்குழு உறுப்பினருமான ஆர். செல்லசுவாமி அவர்களை நித்திரவிளை காவல்நிலைய ஆய்வாளர் நாகூசும் வார்த்தைகளால் இழிவாகப் பேசியும், அவமரியாதை செய்தும் தாக்கியுள்ளார். மேலும் காவல் வாகனத்திற்குள் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றதுடன் உள்ளே வைத்தும் இழிவாகப் பேசியும், தாக்கியும் அராஜ கத்தில் ஈடுபட்டுள்ளார்.
இத்தாக்குதலில் காயமுற்ற எங்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர். செல்லசுவாமியும், அனிஷூம் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். எந்த குற்றச் செயலிலும் ஈடுபடாத எங்கள் கட்சி யினர் மீது வேண்டுமென்றே உள்நோக்கத் தோடும், அரசியல் சார்ந்தும் காவல் ஆய்வாளர் தாக்குதல் நடத்தியுள்ளது கடும் கண்டனத்திற்குரியது மட்டுமல்ல. சட்டத்திற்கு புறம்பான மனித உரிமை மீறல் செயலாகும்.
குற்ற நடவடிக்கை எடுத்திடுக!
எனவே, எவ்வித ஆத்திரமூட்டலும் இல்லாத நிலையில் எங்கள் கட்சியின் கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் ஆர். செல்லசுவாமி மீதும், முஞ்சிறை வட்டாரக்குழு உறுப்பினர் அனிஷ் மீதும் தாக்குதல் நடத்திய காவல் ஆய்வாளர் இக் னோஸ் குமார் என்பவரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்வதோடு, அவர் மீது துறைரீதியான நடவடிக்கை மேற் கொள்ள வேண்டுமெனவும், அவர் அநாக ரீகமாக பேசியும், அடித்தும் மனித உரிமை மீறல் செயலில் ஈடுபட்ட குற்றத்திற்காக அவர் மீது உரிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திடுவ தற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுகிறோம்.