சென்னை,செப்.19- உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான தேர்தல் அலுவலர்களை நியமிக்குமாறு மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தர விட்டுள்ளது. தமிழக உள்ளாட்சித் தேர்தலுக்கான அட்ட வணை தமிழக தேர்தல் ஆணையம் சார்பாக உச்சநீதி மன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், நவம்பர் மாதத்திற்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப் படலாம் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித் துள்ளது. அதன்படி, மாநகராட்சிகள், நகராட்சிகள், ஊராட்சிகள் மற்றும் ஒன்றியங்களுக்கான தேர்தல் நடத்தும் அலுவலர்களை அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் நியமிக்குமாறு மாநில தேர்தல் ஆணை யம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு இந்த உத்த ரவை அரசிதழில் வெளியிட்டுள்ளது.