கிணற்றைக் காணோம் என்பது நகைச்சுவையாகத் தோன்றக் காரணமே, இதெல்லாம் காணாமல் போக முடியுமா என்ற எதார்த்தம்தான். ஆனால், பாஜக ஆட்சியில் எது வேண்டு மானாலும் காணாமல் போகும் போலி ருக்கிறது. உண்மைதான்! வரி செலுத்தும் பட்டியலிலிருந்து நாற்பதாயிரம் உற்பத்தி நிறுவனங்கள் காணாமல் போயிருக்கின்றன. இது கிணற்றைவிடப் பெரியதாக, கிராமமே காணாமல் போன அத்திப்பட்டி மாதிரி இருக்கும் போலிருக்கிறதே என்று தோன்றுகிறதா? இப்பவே கண்ணக் கட்டுதே...!
கொரோனாவுக்கு முந்தைய, அதாவது 2019-20ஆம் நிதியாண்டில் உற்பத்தித்துறையைச் சேர்ந்த 8,16,021 நிறுவனங்கள் வரி செலுத்தியிருக்கின்றன. ஆனால், 2021-22ஆம் நிதியாண்டில் இந்த எண்ணிக்கை 7,75,846 ஆகக் குறைந்திருக்கிறது. அதாவது, 40,175 நிறுவனங்கள் குறைந்திருக்கின்றன. வரி செலுத்தும் பட்டியலிலிருந்து விடுபட்டி ருக்கின்றன என்றால், வரி ஏய்ப்புச் செய்கிறார்கள் என்று பொருள் அல்ல. பொய்க் கணக்கு எழுதினால் குறைவாக வரி செலுத்த முடியுமே தவிர, வரியே செலுத்தாமல் மறைக்க முடியாது. உண்மை என்னவென்றால், அவ்வளவு நிறு வனங்கள், மோடி அரசின் தவறான கொள்கை களால் நஷ்டமாகி மூடப்பட்டிருக்கின்றன.
உற்பத்தித்துறை நிறுவனங்களின் லாபம் என்பது மோடி ஆட்சி தொடங்கி யதிலிருந்தே சரிந்துதான் வந்திருக்கிறது. 2015-16 நிதியாண்டில், சேவை உட்பட அனைத்துத்துறை நிறுவனங்கள் ஈட்டுகிற மொத்த லாபத்தில், உற்பத்தித்துறை நிறுவனங்களின் லாபம் 46.7 சதவீதமாக இருந்தது. ஆனால், 2020-21 நிதி யாண்டில் இது 29.5 சதவீதமாகச் சரிந்து விட்டது. கொரோனாவுக்கு முன்பே - 2016-17 நிதியாண்டிலிருந்தே இந்தச் சரிவு தொடங்கிவிட்டது என்பதை ஒன்றிய அர சின் பட்ஜெட் ஆவணங்களில் உள்ள தர வுகள் கூறுகின்றன. அதாவது, கொரோனா வால் சரிவு ஏற்படவில்லை, அரசின் தவ றான கொள்கைகளினாலேயே உற்பத்தித் துறை நிறுவனங்கள் பாதிப்புக்கு உள்ளாகி யிருக்கின்றன என்று பொருள். 2016 நவம்பரில் திடீரென்று நடைமுறைப் படுத்தப்பட்ட பணமதிப்பு நீக்கம், 2017 ஜூலையில் மோசமான குளறுபடிகளுடன் நடைமுறைப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி வரி போன்றவற்றால் தொடங்கியிருந்த சரிவை, 2020 மார்ச்சில் முன்னறிவிப்பின்றி, திட்ட மிடல் இன்றி அறிவிக்கப்பட்ட லாக் டவுன் மிகப்பெரியதாக்கி, உற்பத்தித்துறையை மிகப்பெரிய நெருக்கடிக்கு உள்ளாக்கியது.
மறுபுறம், மேக் இன் இந்தியா என்று பெரிய விளம்பரங்களோடு தொடங்கப்பட்ட திட்டமே, உற்பத்தித்துறையில் வளர்ச்சியை ஏற்படுத்துவதாகச் சொல்லித்தான். ஆனால், உற்பத்தித்துறை சரிவைத்தான் சந்தித்திருக்கிறது என்பதை ஒப்பிட்டால், மேக் இன் இந்தியா திட்டம் எதிர்த்திசையில் - அதாவது, தோல்விப் பாதையில் பயணித்திருக்கிறது என்பது புரியும். அதனால்தான் 2014 செப்டம்பரில் மிகப் பெரிய ஆர்ப்பாட்டமாகத் தொடங்கப்பட்ட மேக் இன் இந்தியா திட்டம், பத்தாவது ஆண்டில் அடியெடுத்து வைத்த 2023 செம்டம்பரில், எவ்விதக் கொண்டாட்டத்தி லும் மோடி அரசு ஈடுபடவில்லை.
ஆண்டுதோறும் சில ஆயிரம் நிறு வனங்களாவது புதிதாக உருவாவதுதான் வளர்ச்சி. அப்படி வளர்ச்சி ஏற்படா விட்டாலும், இருப்பதாவது குறையாமல் பாதுகாக்கப்பட வேண்டும். ஆனால், நாற்பதாயிரத்துக்கும் அதிகமான நிறு வனங்கள் இல்லாமல் போயிருக்கின்றன என்பது, இந்தியப் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய கவலைக்குரிய செய்தியாகும். இது பொருளாதார பாதிப்பு மட்டுமின்றி, மிகப்பெரிய வேலை இழப்புக்கும் காரண மாக அமைந்திருக்கிறது. ஆனால், விதவிதமான உடையணிந்து, ஃபோட்டோ செஷன்களில் போஸ் கொடுக்கிற வேலையில் பிசியாக இருக்கிற பிரதமருக்கு, இவை பற்றியெல்லாம் கவலைப்பட நேரமில்லை. நீங்கள் அதை கவனியுங்கள், ஆட்சியை கவனிக்க நாங்கள் இந்தியா கூட்டணியைத் தேர்ந்தெடுக்கிறோம் என்று நாம் முடிவெடுக்காவிட்டால், இந்தியப் பொருளாதாரம் மேலும் சரிவதைத் தடுக்க முடியாது. - - அறிவுக்கடல்