tamilnadu

img

குழந்தைகள் மீதான உரிமை மீறல்களை புரிந்து கொள்வோம்!

“ஒரு சமூகம் அதன் குழந்தையை நடத்தும் விதத்தை விட வேறு எது வும் அதன் ஆன்மாவைக் கூர்மையாக வெளிப்படுத்தி விடமுடியாது” -நெல்சன் மண்டேலா- இப்படித்தான் இந்நூல் தொடங்குகிறது. குழந்தைகளை தெய்வங்கள் என கொண்டாடும் அதே சமூகம் தான் குழந்தை களை உழைப்பாளர்களாகவும், திருமண கோலத்தில் மணமக்களாகவும், பாலியல் துன்புறுத்தல், சாதி மத ரீதியிலான ஒதுக்கப்படுதலுக்கு உள்ளாக்குகின்றது. குழந்தைகளுக்கான உரிமைகள் ஒரு பக்கம் சூரிய அஸ்தமனம் போல சந்தடி இல்லாமல் மறைந்து கொண்டிருக்கிறது.  

மறுபக்கம் பெருந் தொற்று பரவுவது போல் அவர்களுக்கு எதிரான குற்றச் செயல் களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ஒரு குற்றம் நிகழ்ந்து அதற்கு பின்னர் குரல் கொடுப்பதை விட குற்றம் நிகழாமல் தடுப்பது சமூகத்தில் மிகவும் பாதிக்கப் படக்கூடிய பிரிவுகளாக இருக்கும் பிள்ளை களின் வாழ்வுரிமையை பாதுகாக்கும்.இதில் ஊடகத்தின் பங்கு மிக மிக அவசியம்.ஊடகம் ஒரு ஆற்றல் கொண்ட வலிமை யான ஆயுதம்.  மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்து வது,  மனமாற்றம் நோக்கி நகர்த்துவது, பொதுக் கருத்தை உருவாக்குவது என  பல்வேறு வழிகளில் ஊடகம் தனது பங்க ளிப்பை இந்த சமூகத்தில் ஆற்றியுள்ளது.

குழந்தை உழைப்பாளர், குழந்தை கடத்தல், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை என அவர்கள்  மீதான உரிமை மீறல்கள் குறித்து ஓரளவு ஊடகங்கள் பதிவு செய்கின்றன.  ஆனால் அவர்களுக்கு மறுக்கப்படும் சத்தான உணவு, தரமான குடிநீர், சரியான கல்வி என குழந்தைகள் மீதான உரிமை மறுப்பு குறித்து எவரும் பேசுவதில்லை.  

ஆனால் உரிமை மீறல் அளவுக்கு மறுப்பு குறித்தும் ஊடகங்கள் பேசவேண்டும். அது போன்று என்ன நடந்தது என்ப தை விட, அது நடக்க காரணம் என்ன? என்று புரிதலை ஏற்படுத்துவது அவசியம்.  இதனால் பல குழந்தைகள் சாதனை யாளர்கள் ஆகிடவும் மேலும் பல குழந்தை களின் மீது வன்முறை நிகழாமல் தடுக்க வும் உதவிடும். குழந்தை உரிமை மீறல்கள் பற்றிய ஒரு புரிதலையும், அதற்கு இருக்கும் சட்ட ங்கள், நடைமுறைகள், அமைப்புகளின் பணி குறித்தும் விளக்க இந்த கையேடு முனைகிறது. ஒரு குழந்தை குறித்த செய்தியினை பதிவு செய்யும் நபர் வெறும் ஊடகவிய லாளராக மட்டும் அல்லாமல், குழந்தை மைய ஊடகவியலாளராக அந்த குழந்தை யின் பாதுகாவலராக, குழந்தையை வளர்த்தெடுக்கும் ஊடகவியலாளராக செயல்பட வேண்டும் என்கிற எண்ணத்து டன் அந்த செய்தியை வெளியிட வேண்டும்.

குழந்தைகளின் நலன்கள், உள வியல், உரிமைகள், குழந்தைகள் தொடர்பாக செய்தி வெளியிடும்போது கட்டாயம் கவனத்தில் கொள்ள வேண்டிய நெறிமுறைகள் என முக்கியமான தகவல் களை யுனிசெப் நிறுவனத்துடன் இணை ந்து தோழமை அமைப்பினர் இந்த நூலை வெளிக்கொண்டு வந்திருப்பது ஊடக வியலாளர்களுக்கு மிகவும் பயனளிக்கும்

. இன்றைக்கு ஊடகங்கள் பரபரப்பான செய்திகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கின்றன.  குழந்தைகள் நலன், குழந்தைகள் உரிமை போன்ற விஷயங்களில் குறிப்பிடத்தக்க இடத்தை அளிக்கவில்லை என்பதே இன்றைய நிலை. இந்த நூலை வாசிக்கும் ஊடகவிய லாளர்கள் குழந்தைகளது உரிமைகள், அதுபோன்று அவர்களது நலனை காத்திடும் ஒளி விளக்காய் ஊடகங்களை உருவாக்குவார்கள், மேம்படுத்துவார்கள் என்பதில் ஐயமில்லை. இந்த நூல் ஊடகவியலாளர்கள் மட்டு மல்ல அனைவரும் வாசிக்க வேண்டிய நூல்

“ஊடகத்தின் ஒளிவிளக்கில் குழந்தைகள் உரிமைகள்”
 (ஊடகவியலாளர்களுக்கான கையேடு)
அ. தேவநேயன்
வெளியீடு :  “தோழமை”
அடையாறு சென்னை - 600020
தொடர்பு எண்: 044 24462703