காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத் தலைவர் சந்திரன், செயலாளார் நடராஜன், பொருளாளர் தேவராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.