கருவூலக்கணக்குத்துறை மற்றும் இதர அலுவலகப் பணிகளை விப்ரோ நிறுவனத்தின் கீழ் கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வடசென்னை மாவட்டக் குழு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செவ்வாயன்று (ஜூன் 25) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் அந்தோணிசாமி, நிர்வாகிகள் சுந்தராம்பாள், பார்த்திபன், ஏழுமலை உட்பட பலர் கலந்து கொண்டனர்.