சென்னை, ஆக.4- பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சட்டத்தை ஒன்றிய மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் என்று சென்னையில் நடை பெற்ற தீக்கதிர் செய்தியா ளர்கள் பயிலரங்கம் வலியுறுத்தியுள்ளது.
சென்னையில் சனி ஞாயிறு (ஆக,3.4) இரு நாட்கள் நடைபெற்ற பயி லரங்கில் இது குறித்த தீர்மானத்தை தீக்கதிர் மூத்த செய்தியாளர் தூயவன் முன்மொழிந்தார். தேனி மாவட்ட செய்தியாளர் எஸ். முத்து வழிமொழிந்தார்.
தீர்மானம் வருமாறு:
வரலாற்றில் மனித சமூகத்தின் மீது நிகழ்த்தப் பட்ட பல்வேறு விதமான ஒடுக்குமுறைகளுக்கு சாட்சியாய் நின்று நீதி பெற்றுத் தந்த பெருமை பத்திரிகையாளர்களையே சாரும். மேன்மையான சமூகத்தைக் கட்டமைப் பதில் பத்திரிகையாளர் களின் பங்கு அளப்பரியது. அப்படிப்பட்ட பத்திரிகை யாளர்களின் மீது நிகழ்த்தப்படும் வன்முறை கள் உலகெங்கிலும் அதி கரித்து வருவது கவலை யளிக்கிறது. குறிப்பாக உலகின் மிகப்பெரிய நாடு எனப் பெருமைப்பட்டுக் கொள்ளும் இந்தியாவிலும் அதிகரித்து வருவது ஜன நாயகத்தின் படுவீழ்ச்சி யாகத்தான் பார்க்கப்படும்.
பத்திரிகையாளர்கள் அதிகம் கொலை செய்யப் பட்ட நாடுகளில் முதல் பத்து நாடுகளில் இந்தியாவும் ஒன்று. கொலைகள் மட்டு மல்ல, தாக்குவது, மிரட்டு வது, ஆபாசமாகத் திட்டுவது எனப் பல வகையான வன் முறைகள் நிகழ்ந்து வரு கின்றன. சமூக வலை தளங்கள் பெருகிவிட்ட இந்தக் காலத்தில், இணைய வழியிலான அச்சுறுத்தல்கள் அதிகரித்திருக்கின்றன. குறிப்பாக, மூன்றில் இரண்டு பெண் பத்திரிகையாளர்கள் இணைய வழியிலான அச் சுறுத்தல்களை எதிர் கொண்டு வருவதாக யுனெஸ்கோ அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகப் பத்தி ரிகையாளர்களுக்கு ஆபத்தான நாடுகளில் இந்தி யாவும் ஒன்றாக இருக்கிறது. அதனால், அவர்களின் பாது காப்புக்கு தேசிய அளவி லான ஒரு சட்டம் இயற்றப் பட வேண்டும்.
இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பயிலரங்கில் தீக்கதிர் முதன்மை பொதுமேலாளர் என்.பாண்டி, ஆசிரியர் எஸ்.பி.ராஜேந்திரன், எண்ம பதிப்பு பொறுப்பாசிரியர் எம்.கண்ணன், சென்னைப் பதிப்பு பொறுப்பாசிரியர் அ.விஜயகுமார், செய்தி ஆசிரியர்கள் சி.ஸ்ரீராமுலு (சென்னை) ஏ.ஆர்.பாபு (கோவை) பொது மேலாளர்கள் எஸ்.ஏ. மாணிக்கம் (கோவை) எம்.உஷாராணி (சென்னை) ஜோ.ராஜ்மோகன் (மதுரை) ஜெ.ஜெயபால் (திருச்சி) மற்றும் மாவட்ட செய்தி யாளர்கள் கலந்துகொண்ட னர்.
முன்னதாக சனிக்கிழமை (ஆக.3) பயிலரங்கை துவக்கிவைத்து ப்ரண்ட் லைன் ஆசிரியர் வைஷ்ணா ராய் கருத்துரை நிகழ்த்தி னார். ஞாயிறன்று (ஆக.4) பயிலரங்கை நிறைவுசெய்து சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார்.