சென்னை:
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 4 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மரியாதை செலுத்தினர். இதையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் திரண்டு வந்த முதல்வர், துணை முதல்வர்
ஆகியோர் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர், நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.