tamilnadu

img

தகவல் தொழில்நுட்பத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவில் இருந்து ஜெயா பச்சன் விலகல்

நாடாளுமன்றத் தின் இரு அவைகளிலும் பல் வேறு நிலைக்குழுக் களுக்கு தலைவர் கள் மற்றும் உறுப் பினர்கள் சமீபத்தில் நியமிக்கப்பட்டனர். பாஜக எம்பி நிஷிகாந்த் துபே தலைமை யிலான தகவல் தொழில்நுட்ப துறையின் நிலைக்குழுவில் சமாஜ்வாதி எம்.பி., ஜெயா பச்சன் உறுப்பினராக நிய மிக்கப்பட்டார். ஆனால் அதில் தனக்கு விருப்பம் இல்லை என்று ஜெயா பச்சன் தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில், மாநிலங்களவை செயலகம் வியாழனன்று வெளி யிட்டுள்ள அறிக்கையில், பசவராஜ் பொம்மை தலைமையிலான தொழி லாளர், ஜவுளி மற்றும் திறன் வளர்ச்சித் துறையின் நிலைக்குழுவின் உறுப்பின ராக ஜெயா பச்சன் நியமிக்கப்பட்டுள் ளார். 

தொழிலாளர் துறைக்கான நிலைக் குழு உறுப்பினராக இருந்த திரிணா முல் காங்கிரஸ் எம்பி சாகேட் கோகலே,  தகவல் தொழில்நுட்ப துறை நிலைக் குழுவின் உறுப்பினராக நியமிக்கப் பட்டுள்ளார். 

சிபிஎம் எம்.பி., ரஹிம்

வெளியுறவு துறை நிலைக்குழுவில் உறுப்பினர்களாக உள்ள எம்பிக்கள் ஏ.ஏ.ரஹீம்(சிபிஎம்), கிரிராஜன்(திமுக) ஆகியோர் வீட்டு வசதி மற்றும் நகர்புற துறைக்கான நிலைக்குழு உறுப் பினர்களாக நியமிக்கப் பட்டுள்ளனர்.