tamilnadu

மறியல் போராட்டம் டிச.9 க்கு ஒத்திவைப்பு

சென்னை, நவ. 21 - மாவட்டத் தலைநகரங்களில் நவ.25 அன்று நடைபெறுவதாக இருந்த மறியல் போராட்டம் டிச.9 ஆம் தேதி நடைபெறும் என்று ஜாக்டோ-ஜியோ அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மாநில ஒருங் கிணைப்பாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசு தொடர்ச்சியாக ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்-பணியாளர்கள் கோரிக்கைகள் மற்றும் தேர்தல் கால வாக்குறுதிகள் நிறைவேற்ற வலியுறுத்தி நவ.25 அன்று மாவட்டத் தலைநகரங்களில் மறியல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

தீபாவளியையொட்டி நவ.13 அன்று அரசு விடுமுறை அளித்தது. அதை ஈடு செய்யும் வகையில் நவ.18  ஆம் தேதி வேலை நாளாக அறிவித்துள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கான வாக்காளர் சேர்ப்பு மற்றும் திருத்தம் செய்வதற்கான முகாம்களை நவ.18,  19 தேதிகளில் நடத்த  இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருந்தது. அரசின் அறிவிப்பை தொடர்ந்து இந்த முகாம்களை நவ.25, 26 தேதி களில் நடத்துகிறது.

இந்த பணிகளில் பெரும்பான் மையாக தொடக்கப் பள்ளி ஆசிரியர் களும், அரசு ஊழியர், பணியாளர் களும் ஈடுபட வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே, நவ.25 அன்று நடத்தவிருந்த மறியல் டிச.9 அன்று  நடைபெறும்” என்று கூறப்பட்டுள் ளது.