tamilnadu

img

குழந்தைகளின் திறனை அறிய உதவும் செயலி அறிமுகம்  

சென்னை, பிப்.3 குழந்தைகளின் திறனை அறியும் கிட்ஸ் சௌபால் செயலி சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டது. குழந்தைகளின் இளம் மனதும் சிந்திக்கும் மூளையும் இன்னும் ஆற்றலுடனும் புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளும் வகையிலும் இருப்பதற்கு இந்த செயலி உதவும் என்று நிகழ்ச்சியில் பேசிய கிட்ஸ் சௌபால் செயலியின் இணை நிறுவனர் தேவேந்திர ஜெய்ஸ்வால் கூறினார்.குழந்தைகளுக்கு இருக்கும் ஆற்றல், திறன்கள், தனித்த செயல்பாடுகள் ஆகியற்றை கண்டறிந்து அதில் அவர்களை மேலும் தீவிரமாகச் செயல்படுத்த இந்த செயலி வழிவகுக்கும் என்றும் அவர் கூறினார். இந்த செயலி பெற்றோர்கள்,மாணவர்கள், கல்வியாளர் கள் உதவியுடன் இந்த செயலி செயல்படுவதாகவும் குழந்தை களை சுற்றியுள்ள வாய்ப்புகளைத் தேர்ந்தெடுத்து அவர்கள் சரியான முடிவுகளை  எடுப்பதற்கு உரிய கல்வி மற்றும் இதர சூழல் வாய்ப்புகளை சௌபால் செயலி ஏற்படுத்தித் தருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.இந்த செயலியின் தூதராக பல் திறன்களை பெற்றுள்ள பெங்களூரைச் சேர்ந்த 14வயது சிறுமி திஸ்யா சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.