tamilnadu

img

திருப்பூர், நாகப்பட்டினம் தொகுதியில் சிபிஐ வேட்பாளர்கள் மாபெரும் வெற்றி!

ல், திமுக தலைமை யிலான ‘இந்தியா’ கூட்டணியில்  போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட்  கட்சியின் வேட்பாளர்கள்- திருப்பூ ரில் கே. சுப்பராயனும், நாகப்பட்டி னத்தில் வை.செல்வராஜூம் லட் சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.

திருப்பூர் - கே. சுப்பராயன்

திருப்பூர் மக்களவை தொகுதி யில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் வேட்பாளர் கே. சுப்பராயன், 1  லட்சத்து 23 ஆயிரத்து 224 வாக்கு கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார்.

திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் 26 சுற்று வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட நிலையில் ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளர் கே.சுப்பராயன் மொத்தம் 4 லட்  சத்து 65 ஆயிரத்து 356 வாக்குகள் பெற்றார்.

அவருக்கு அடுத்ததாக அதி முக வேட்பாளர் 3 லட்சத்து 44 ஆயி ரத்து 117 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

திருப்பூர் மக்களவைத் தொகுதி யில் மொத்தம் 11 லட்சத்து 35 ஆயி ரத்து 267 வாக்குகள் பதிவாகியிருந் தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, கே. சுப்பராயன் வெற்றிபெற்றதை தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே. காம ராஜ், மாவட்டச் செயலாளர் செ. முத்து கண்ணன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஜி. சம்பத், பி.ஆர்.  கணேசன் ஆகியோர் கே. சுப்ப ராயனை நேரில் சந்தித்து வாழ்த் துக்களை தெரிவித்தனர்.

நாகப்பட்டினம் - வை.செல்வராஜ்

நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி  சார்பில் போட்டியிட்ட இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி வேட்பாளர் வை. செல்வராஜ் 4 லட்சத்து 65 ஆயிரத்து 44 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி  சார்பில் போட்டியிட்ட இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி வேட்பாளர் வை. செல்வராஜ் 4 லட்சத்து 65 ஆயிரத்து 44 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். 

இதனையடுத்து அதிமுக சார்பில் போட்டியிட்ட சுர்ஜித் சங்கர்  2 லட்சத்து 56 ஆயிரத்து 087 வாக்கு கள் பெற்று 2-ஆம்  இடத்தைப் பிடித்தார். வை. செல்வராஜ் 2  லட்சத்து 08 ஆயிரத்து 957 வாக்கு கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கடந்த முறையும் இதே தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது.

வெற்றி குறித்து வேட்பாளர்  வை.செல்வராஜ் கூறுகையில், “மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் மற்றும் மீனவர்களின் வாழ்வு மேம்பட உறுதுணையாக இருப்பேன். காவிரி பாசனத்தின் கடைமடைப் பகுதியான நாகை  தொகுதி மக்களுக்காக நாடாளு மன்றத்தில் குரல் கொடுப்பேன்” என்றார்.

வெற்றி பெற்றதற்கான சான்றி தழை தேர்தல் நடத்து அலுவலர் மற்றும் நாகை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் வழங்கினார். 

இந்நிகழ்வில் திராவிட முன்  னேற்றக் கழக மாவட்டச் செயலா ளர் என். கௌதமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகப்பட்டி னம் மாவட்டச் செயலாளர் வி. மாரி முத்து, கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி, திருத் து றைப்பூண்டி சட்டமன்ற உறுப்பி னர் கே.மாரிமுத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செய லாளர் நாக. அருட்செல்வன் உள்  ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.