tamilnadu

img

ஸ்காட்லாந்து தேசிய நூலகத்தில் தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர்

சென்னை, ஜூன் 1- தமிழக அரசின் பள்ளிக்கல்  வித்துறை அமைச்சர் அன்பில்  மகேஸ் பொய்யாமொழி டென் மார்க், சுவீடன், நார்வே ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அந்த நாடுகளில் உள்ள கல்வி முறை, பாடத்திட்டங்கள், பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்து நேரில்  சென்று பார்வையிட்டு வரு கிறார்.

அந்த வகையில் தற்போது ஸ்காட்லாந்துக்கு சென்றுள்ள அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அங்குள்ள தேசிய நூலகத்திற்கு சென்று நேரில் பார்வையிட்டார். அந்தச் செய்தியை தமது ‘எக்ஸ்’ சமூக வலைத்தள பக்கத்திலும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பகிர்ந்து கொண்டுள்ளார். 

“பிரிட்டன் கூட்டமைப்பின் மிகப்பெரிய நூலகங்களில் ஒன்  றான ஸ்காட்லாந்து தேசிய நூல கம் சென்றோம். 1699-ஆம்  ஆண்டு கட்டப்பட்ட இந்நூல கம் தற்போது இணையதள வச தியின் மூலம் வாசகர்களுக்கு பெரும்பாலான சேவைகளை வழங்கும் நவீன நூலகமாக  திகழ்கிறது. தொடர்ந்து ஸ்காட் லாந்தின் மைய நூலகத்தையும், குழந்தைகளுக்காகவே பிரத்  யேகமாக இயங்கிக் கொண்டி ருக்கும் சிறுவர் நூலகத்தையும் பார்வையிட்டோம்.

முத்தமிழறிஞர் கலைஞரின் ஆட்சியில் கட்டப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலக மும், முதலமைச்சர் மு.க. ஸ்டா லின் ஆட்சியில் கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நூலக மும் ஸ்காட்லாந்து நாட்டின் நூல கங்களைப் போலவே காலம் பல கடந்து சாதனையாளர்கள் பலரை உருவாக்கும் என்பதில் சந்தேகம் இல்லை!” என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

;