ரயில் கட்டண உயர்வை திரும்பப் பெறும் அறிவிப்பிலும் பாஜக அரசு பாரபட்சத்தை அரங்கேற்றியிருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மதுரை மக்களவை உறுப்பி னர் சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியிருப்ப தாவது:
கொரோனா காலத்தில் சாதாரண கட்டண பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. பின்னர் அவை சிறப்பு விரைவு ரயில்களாக அறிவிக்கப்பட்டு விரைவு ரயில்களுக்கான கட்டணம் வசூலிக்கப்பட்டது.
நாடாளுமன்றத்தில் தொடர்ந்து கோரிக்கை
எளிய மக்களிடமிருந்து இரண்டு மடங்குக் கட்டணத்தை வசூலிக்கும் கொடிய செயலாக இது இருந்தது. இதனைக் கைவிட வேண்டும் என நான் உட்பட பல நாடாளுமன்ற உறுப் பினர்கள் தொடர்ந்து குரல் கொடுத்துள் ளோம். ரயில்வே அமைச்சரிடம் நேரடியாக வும் வலியுறுத்தியுள்ளோம். நாடாளுமன்றத்தி லும் இப்பிரச்சனையை எழுப்பியுள்ளோம். தற்போதைய கட்டண உயர்வு வாபஸ், இரண்டு ஆண்டுகாலப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி ஆகும்.
கவுண்டர்களில் கூடுதல் கட்டணம்
ஒரு வாரத்துக்கு முன்பு ரயில்வே வாரியம் தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்க ளில் சாதாரண கட்டணம் வசூலிக்க ஏற்பாடு செய்துள்ளது. ஆனால் கவுண்டர்களில் விரை வுக் கட்டணமே வசூலிக்கப்பட்டு வருகிறது.
தென்மேற்கு ரயில்வேயானது, அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும், சிறப்பு விரைவு ரயில்களில் சாதாரண பயணக் கட்டணம் வசூலிக்க அறிவுறுத்தி உள்ளது. தெற்கு ரயில்வேயில் மதுரை, சென்னை, திருச்சி கோட்டங்கள் அனைத்து ரயில் நிலை யங்களிலும் நின்று செல்லும், சிறப்பு விரைவு ரயில்களில் சாதாரண கட்டணம் வசூலிக்க உத்தரவிட்டுள்ளன.
சேலம், பாலக்காடு கோட்டங்களுக்கு இல்லையா?
ஆனால், இன்னும் சேலம், திருவனந்த புரம், பாலக்காடு கோட்டங்கள் உத்தரவிட வில்லை. உத்தரவிடப்பட்டுள்ள கோட்டங்கள் 27.02.2024 முதல் சாதாரணக் கட்டணம் வசூ லிக்க உள்ளன. பாலக்காடு, திருவனந்தபுரம், சேலம் கோட்டங்களில் விரைவுக் கட்டணமே வசூலிக்கப்படும் முரண்பாடு நிலவுகிறது.
ரயில்வே வாரியம் இதற்கான உத்தரவை அனுப்பாததால் இந்த முரண்பாடு நிலவுகிறது. ரயில்வே துறை வெளிப்படையாக அறி வித்தால் எதிர்க்கட்சி கோரிக்கைகள் ஏற்கப் பட்டதாக கருதப்படும் எனக்கருதியே இப்படி செயல்படுத்தியிருப்பதாக தோன்றுகிறது.
பாரபட்சத்தை உடனடியாக களைய வேண்டும்!
அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் பொருந்தும்படி, அனைத்து ரயில் நிலை யங்களிலும் நின்று செல்லும் சிறப்பு விரைவு ரயில்களில் சாதாரணக் கட்டணம் வசூலிக்க உத்தரவிட வேண்டும் என்று நான் ரயில்வே வாரியத்தை கேட்டுக் கொள்கிறேன். இதில் காலதாமதம் செய்தால் அது பயணிகளிடை யேயும் ரயில்வேக்கள் இடையேயும் பார பட்சத்தை உருவாக்கும். மக்கள் பாதிப்பு தொடரும். எனவே, ரயில்வே வாரியம் விரைந்து இதற்கான உத்தரவை அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் வெளிப்படை யாக அறிவிக்க கோருகிறேன்.
இவ்வாறு சு.வெங்கடேசன் எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.