குடியுரிமைத் திருத்தச் சட் டத்தை அமலுக்கு கொண்டு வருவதற்கான அறிவிக்கை யை, ஒன்றிய பாஜக அரசு மார்ச் 11 அன்று வெளியிட்டது. 2019 டிசம்ப ரில் நாடாளுமன்றத்தில் நிறைவேற் றப்பட்ட இச்சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தில் ஈடு பட்டனர். இதனாலும், விதிமுறைகளை வகுக்க முடியாத காரணத்தாலும் இந்த சட்டத்தைக் கிடப்பில் வைத்திருந்த பாஜக தற்போது மக்களவைத் தேர்தல் ஆதாயத்திற்காக அமல்படுத்துகிறோம் என்று அறிவித்துள்ளது. இதற்கு காங்கி ரஸ், இடதுசாரிகள், திமுக, மதிமுக, விடு தலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட - அன்று இந்தச் சட்டத்தை எதிர்த்து நாடாளு மன்றத்தில் வாக்களித்த கட்சிகள், தற்போ தும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளன. போராட்டங்களையும் அறிவித்துள்ளன.
ஆனால், இந்தச் சட்டத்தை அன்று ஆதரித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் குடியுரிமைச் சட்டத்தை எதிர்ப்பதாக அறிவித்துள்ளார்.
இந்த சட்டம் நாடாளுமன்றத்தில் நிறை வேறுவதற்கு காரணமே அதிமுக-வும் பாமகவும். அதிமுக சார்பில் அன்றைக்கு மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்த எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன், என். சந்திரசேகரன், ஏ.முகமது ஜான், ஏ.கே. முத்துக்கருப்பன், ஏ. நவநீத கிருஷ்ணன், சசி கலா புஷ்பா, செல்வ ராஜ், ஆர். வைத்தி லிங்கம், விஜய குமார், விஜிலா சத்யானந்த் மற்றும் பாமக தலைவர் அன்புமணி ராம தாஸ் ஆகியோர் சிஏஏ சட்டத்தை ஆதரித்து வாக்களித்த னர். மாநிலங்களவையில் பெரும் பான்மை இல்லாத பாஜக, இவர்களை வைத்தே பெரும்பான்மையைப் பெற்றது.
ஆனால், அந்த துரோகத்தை தந்திர மாக மறைத்து விட்டு, கூட்டத்தோடு கூட்ட மாக தாங்களும் எதிர்க்கிறோம் என்று நாட கத்தை அரங்கேற்றியுள்ளார்.
“மாபெரும் வரலாற்றுப் பிழையை ஒன்றிய அரசு செய்துள்ளது. அகதி களுக்கு குடியுரிமை அளிக்கும் சட்டம் என்கிற பெயரில் கொண்டுவரப்பட்ட இந்த சிஏஏ திருத்தச் சட்டத்தை பூர்வ குடிமக்களான இஸ்லாமியர்களுக்கு, ஈழத் தமிழர்களுக்கு எதிராக அமல்படுத்த நினைத்தால் அதிமுக அதனை ஒரு போதும் அனுமதிக்காது. இதற்கெதிராக நாட்டு மக்களுடன் இணைந்து அதிமுக வும் ஜனநாயக ரீதியாக போராடும் என் பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளி யிட்டார்.