tamilnadu

img

மினி கிளினிக்களுக்கு மருத்துவர், செவிலியர், ஊழியர்களை புதியதாக நிரந்தர அடிப்படையில் பணியமர்த்திடுக! - சிபிஎம்

மினி கிளினிக்கு மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்களை புதிதாக நிரந்தர அடிப்படையில்
பணியமர்த்த வேண்டும் என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்தி உள்ளது.
இதுகுறத்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது.

சமீபத்தில் ஏற்படுத்தப்பட்டு வரும்"மினி கிளினிக்குகளை" ஏற்கனவே மருத்துவ
வசதி இல்லாத இடங்களில் புதிய கட்டமைப்பை உருவாக்கி ஏற்படுத்தவேண்டும்.
அதில் பணிபுரிய தேவையான மருத்துவர், செவிலியர், உதவியாளர் ஆகியோரை
புதியதாக தேர்வு செய்து நிரந்தர அடிப்படையில் பணியமர்த்தவேண்டும். மாறாக,
ஏற்கனவே பற்றாக்குறை உள்ள மருத்துவமனைகளிலிருந்து "மாற்றுப்பணி"
அடிப்படையில் பணியமர்த்துவது உரிய பலனைத்தராது என்பதுடன்,
"தேர்தலுக்கான அரசியல்" விளையாட்டாகவே பார்க்கப்படும் என்பதை சிபிஐ (எம்)
மாநிலக்குழு சுட்டிக்காட்டுகிறது.

;