தமிழ்நாடு முழுவதும் 07.12.23 மற்றும் 08.12.23 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட தொடர் மழையின் காரணமாக, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 07.12.23 மற்றும் 08.12.23 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த அரையாண்டு தேர்வுகள் மட்டும் 14.12.23 மற்றும் 20.12.23 ஆகிய தேதிகளில் முறையே நடைபெறும் எனவும், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கால அட்டவணையில் 11.12.2023 முதல் குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில் அதே பாடத்திற்கான தேர்வுகள் நடைபெறும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதன் மூலம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் பள்ளி அளவில் வினாத்தாள்கள் தயாரிக்கும் சிரமங்கள் தவிர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.