tamilnadu

img

நாடு முழுவதும் இன்று பொது வேலைநிறுத்தம்.... தமிழகத்தில் மழை பாதித்த 16 மாவட்டங்களில் ஒத்தி வைப்பு.....

சென்னை:
மோடி அரசின் மக்கள்விரோத, தேசவிரோத கொள்கைகளை எதிர்த்து அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள், துறைவாரி சம்மேளனங்கள் மற்றும் அகில இந்திய விவசாயிகள் - விவசாயத் தொழிலாளர்கள் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் நவம்பர் 26(இன்று) மாபெரும் பொது வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. நவம்பர் 27 அன்று விவசாயிகள் இயக்கங்களின் சார்பில் எழுச்சிமிகு போராட்ட இயக்கங்கள் நடைபெறுகின்றன. தமிழகத்தில் நிவர் புயல் - கனமழை காரணமாக திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், பாண்டிச்சேரி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் தொழிற்சங்கங்கள், விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் நடைபெற இருந்த சாலை, ரயில் மறியல் போராட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் திட்டமிட்டபடி மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

;