வேளாண் துறை மாணவர்களுக்கு இலவச டிரோன் பயிற்சி கடலூர்
, ஜூன் 4 - கடலூரில் தந்தை பெரியார் அரசு கலைக் கல்லூரி மாணவர்களுக்கு வேளாண் துறை சார்ந்த இலவச டிரோன் பயிற்சி பட்டறை நடைபெற்றது. பெரியார் அரசு கலைக்கல்லூரி மற்றும் கடலூர் ரோட்டரி சங்கம் இணைந்து மாணவர்களுக்கு டிரோன் பயிற்சி பட்டறை நடத்தப்பட்டது. தமிழக அரசின் டான்சி எனும் பாடத்திட்டம் சார்ந்த தாவரவியல் துறை மாணவர்களுக்கு நடத்தப்படும் இந்த பயிற்சி பட்டறை இரண்டு வார காலம் நடைபெறவுள்ளது. இதன் மூலம் மாணவர்களுக்கு ஒன்றிய அரசின் நிறுவனம் மூலம் சான்றிதழ் வழங்கப்பட்டு பின்வரும் காலங்களில் மாணவர்களுக்கு தொழிற்சார் கடன், வேலைவாய்ப்பு உள்ளிட்டவைகள் வழங்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அரசு கலைக் கல்லூரியில் பயிலும் சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு துறை சார்ந்து வேளாண் பயிர் மேலாண்மை மூலம் அறிந்துகொள்ள இந்த டிரோன் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி பட்டறை தொடக்க நிகழ்வில் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன், வேளாண் துறை தலைவர் நிர்மல் குமார், ரோட்டரி சங்கத் தலைவர் செந்தில் பாரதி, வெங்கடேசன் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இறால் பண்ணைகள் பதிவு செய்ய விண்ணப்பிக்கலாம்
டலூர்,ஜூன் 4- கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணைய சட்ட எல்லைக்கு அப்பாற்பட்ட இடங்களில் உள்ள நன்னீரில் அல்லது உள்நாட்டு பண்ணைகளில் வெள்ளை இறால் வளர்த்தல் தொடர்பான தமிழ்நாடு அரசால் அரசாணை வெளியிடப்பட்டு, பதிவு மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கடலூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளை இறால் பண்ணைகளை பதிவு செய்ய, மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட அளவிலான குழுவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அந்த குழுவிற்கு அனைத்து நன்னீர் அல்லது உள்நாட்டு இறால் பண்ணைகளையும் பதிவு செய்து வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், உரிமம் பெறாமல் வெள்ளை இறால் வளர்ப்பது தெரியவந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது அரசாணையின்படி நடவடிக்கை மேற் கொள்ளப்படும். எனவே, கடலூர் மாவட்டத்தில் கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணைய சட்ட எல்லைக்கு அப்பாற்பட்ட இடங்களில் வெள்ளை இறால் வளர்க்கும் பண்ணை உரிமையாளர்கள், தங்களது பண்ணைகளை பதிவு செய்திட பரங்கிப்பேட்டை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் , கடல் உயிரியல் அண்ணாமலை பல்கலைக்கழகம் எதிரில், பரங்கிப்பேட்டை-608502, அலுவலக தொலைபேசி எண். 04144-243033) விண்ணப்பங்களை சமர்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் ஜூன் 13 விவசாயிகள் குறைதீர் கூட்டம்'
திருவண்ணாமலை, ஜூன் 4 - திருவண்ணாமலை மாவட்டத்தில், ஜூன் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேளாண் துறை மற்றும் விவசாயம் சார்ந்த துறைகளான தோட்டக்கலை துறை, வேளாண் வணிகம், வேளாண் பொறியியல் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, கூட்டுறவுத்துறை, வருவாய்த்துறை, வங்கியாளர்கள் மற்றும் பிற சார்பு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகள் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க உள்ளனர். எனவே விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் தங்கள் பொதுக் கோரிக்கைகளை கூட்டத்தில் தெரிவித்தும் தனிநபர் குறைகள் குறித்து மனுக்கள் அளித்தும் பயன் அடையுமாறு மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.
மின்சாரம் பாய்ந்து தனியார் நிறுவன ஊழியர் பலி!
சென்னை, ஜூன் 4- சேலம் மாவட்டம், குமாரபாளையத்தைச் சேர்ந்த வர் பிரகாஷ்ராஜ் (35) . இவர், கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். பிரகாஷ்ராஜ், சென்னை கோபாலபுரத்தில் உள்ள அந்த நிறுவனத்தில் தலைமை அலு வலகத்தில் நடைபெறும் பயிற்சிக்காக இங்கு வந்தி ருந்தார். இதற்காக அவர், நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை தங்கி யிருந்தார். பிரகாஷ்ராஜ், செவ்வாய்க்கிழமை இரவு மழை பெய்து முடித்த பின்னர் வள்ளுவர் கோட்டம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள ஒரு டீ கடைக்கு வந்தார். அப்போது அந்த டீ கடையில் மின் விளக்கு அலங்காரத்துக்கு நடப்பட்டிருந்த இரும்பு கம்பியை பிடித்தார். இதில் அந்த கம்பியின் மின்கசிவு ஏற்பட்டி ருந்ததால், பிரகாஷ்ராஜ் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சம்பளம் கேட்டு ஆசிரியர்கள் முற்றுகை
சிதம்பரம், ஜூன் 4 - சிதம்பரம் அண்ணா மலை பல்கலைக்கழகத்தில் மே மாதத்திற்கான சம்ப ளம் இதுவரை வழங்கப் படாததால் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள், துணைவேந்தர் குழு உறுப்பினர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 2013 ஆம் ஆண்டு தமிழக அரசு நேரடி கட்டுப்பாட்டில் எடுத்து நிர்வகித்து வரும் இந்த பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட நிதிச் சிக்கலை சரி செய்வதற்காக பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்களை தமிழக அரசின் அலுவலகங்கள் மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களுக்கும் பணி நிரவல் செய்யப்பட்டுள்ளனர். நிதி சிக்கல் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட நிதி சிக்கலால் சில மாதங்களில் ஊழி யர்களுக்கு சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால் ஊழியர்கள் வங்கி கடன் மற்றும் குழந்தை களுக்கு பள்ளி கட்டணம் உள்ளிட்ட அன்றாட செல வுக்கு கூட பணம் இல்லா மல் சிரமம் அடைந்து வரு கின்றனர். இந்த நிலையில், நடைபெற்ற போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஊழி யர்கள் கலந்து கொண்டு மே மாதம் வழங்க வேண்டிய சம்பளத்தை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். தமிழக அரசு பல்கலைக்கழகத்தில் பாராபட்சம் காட்டக்கூடாது, பல்கலைக்கழகத்திலிருந்து ஊழியர்களை பணி நிர வல்களுக்கு அனுப்பக் கூடாது உள்ளிட்ட பல்வேறு முழக்கங்களை எழுப்பி எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக துணை வேந்தர் குழு உறுப்பினர் அருட்செல்வியை சந்தித்து சம்பளம் வழங்கு வது குறித்து அமைதிப் பேச்சுவார்த்தை நடை பெற்றது. தலைமை செய லகத்தில் உள்ள உயர் கல்வித் துறை உயர் அதி காரிகளிடம் தகவல் தெரி வித்துள்ளதாகவும் 5 ஆம் தேதி சம்பளம் வழங்கு வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டது. இதனை ஏற்று போராட்டத்தை விலக்கிக் கொண்டனர். குற்றச்சாட்டு பல்கலைக்கழக முன்னாள் ஊழியர் சங்க நிர்வாகி மனோகரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஊழியர் விரோத போக்கை கடை பிடிக்கும் உயர் கல்வித் துறையில் உள்ள ஒரு சில அதிகாரிகள் தவறான நடவடிக்கை மேற்கொள்வ தற்காக, கடந்த 4 நாட்களாக சம்பளத்தை வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளனர். இந்த பல்கலைக்கழகத்தில் மாதாந்திர ஓய்வூதியம் கடந்த 8 மாதமாக கிடைக்க வில்லை, இறந்துபோன ஊழியர்களின் வாரிசு தாரர்களுக்கு பணி நிய மனம் கிடைப்பதில்லை” என்று தெரிவித்தார்.
காணை ஒன்றியத்தில் போடாத சாலைக்கு செலவு காட்டி ரூ.5 லட்சம் சுருட்டல்
விழுப்புரம், ஜூன் 3 - விழுப்புரம் அருகே போடாத சாலைக்கு போட்டதாக கணக்கு காட்டி ஊராட்சி பொது நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் சுருட்டிய உள்ளனர். விழுப்புரம் மாவட்டம், காணை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அனுமந்தபுரம் ஊராட்சி. இந்த ஊராட்சியின் மதுரா கிராமம் வெங்கமூர். இந்த பகுதிக்கும் அனுமந்தபுரம் செல்லும் சாலை கடந்த பெஞ்சால் புயல் காரணமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டு அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிக்கு ஆளாகி வந்தனர். இதனால், அப்பகுதி மக்கள் சேதமடைந்த அனுமந்தபுரம் முதல் வெங்கமூர் வரை செல்லும் சாலையை சரி செய்ய வலியுறுத்தி ஊராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில், தார் சாலை போடு வார்கள் என காத்திருந்த அப்பகுதி மக்களுக்கு பேரதிர்ச்சியாக போடாத அந்த சாலைக்கு திடீரென சாலையின் ஓரம் ரோடு போட்டு விட்டதாக கூறி சிமெண்ட் பலகையை வைத்திருந்தனர். அதில் “தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, விழுப்புரம் மாவட்டம், காணை ஒன்றியம், அனு மந்தபுரம் ஊராட்சி பொது நிதி 2024-2025-ல் அனுமந்தபுரதிலிருந்து வெங்கமூர் செல்லும் சாலை, பெஞ்சால் புயலால் பாதிக்கப்பட்ட சாலை சீரமைத்தல் மதிப்பீடு:- ரூ.5 லட்சம்” என்று குறிப்பிடப் பட்டிருந்தது. சிபிஎம் கண்டனம் இதையறிந்த அப்பகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், போடாத சாலைக்கு போட்டதாக கணக்கு காட்டி ரூ.5 லட்சம் சுருட்டிய ஊராட்சி நிர்வாகம் மற்றும் அதற்கு உறுதுணையாக இருந்த வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். மேலும் நடவடிக்கை இல்லை என்றால் விரைவில் பாதிக்கப்பட்ட பகுதி மக்களை திரட்டி காணை வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என அறி வித்துள்ளனர். உடனடியாக அந்த சாலையை சரிசெய்ய வேண்டும் என்ற கோரிக்கை அப்பகுதி மக்கள் மத்தியில் வலுத்து வருகிறது.