tamilnadu

சித்த மருத்துவத்தில் சிகிச்சை பெற்ற 42 பேர் குணமடைந்தனர்

சென்னை, ஜூலை 12 - சென்னை வியாசர்பாடியில் உள்ள அம்பேத்கர் கலைக்  கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள, சித்த மருத்துவ மையத்தில்  கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 42 பேர் பூரண குணமடைந்துள்ளனர். ஜூன் மாதம் 25ஆம் தேதி துவக்கப்பட்ட இந்த மையத்தில்  230 படுக்கை வசதிகள் உள்ளன. 6 சித்த மருத்துவர்கள், 3 அலோபதி மருத்துவர்கள், 4 செவிலியர்கள் பணியில் உள்ளனர். நோயாளிகளுக்கு உதவி செய்ய 12 பணி யாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இங்கு அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சித்த மருத்துவ  சிகிச்சையோடு, யோகா, வர்மம் உள்ளிட்ட பல்வேறு வகை  சிறப்பு பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. நெல்லிக்காய் சாறு, கபசுரக் குடிநீர், நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட மூலிகை குடிநீர் ஆகியவையும் வழங்கப்படுகிறது. மேலும் இந்த மூலிகை மருந்துகள் மையத்திலேயே தயாரிக்கப்படுகிறது.  சித்த மருத்துவம் மூலம் சிகிச்சை பெறுபவர்களின் தொற்று  அறிகுறிகள் 2 அல்லது 3 நாட்களிலேயே  மறைந்துவிடுவ தாக தெரிவிக்கின்றனர். ஆனால் 10 நாட்கள் வரை கண்காணிப்  பில் வைக்கப்பட்டு அனுப்புவதாக மருத்துவர்கள் தெரிவிக்  கின்றனர். தற்போது அங்கு 110 பேர் சிகிச்சையில் உள்ளனர்.