tamilnadu

பொது சுகாதாரத் துறை முன்னாள் - இந்நாள் இயக்குநர்களுக்கு அபராதம்

சென்னை:
பொதுசுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் மற்றும் முன்னாள் இயக்குநர் குழந்தைசாமிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.அரசின் உயர்பதவிகளில் உள்ளவர்கள் நீதிமன்றத்தில் தவறான தகவல்களை அளிக்கின்றனர் என நீதிபதி சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.டி.என்.பி.சி. நியமனம் தொடர்பாக மனுதாரர் தொடர்ந்த வழக்கில் சுகாதார இயக்குநரின் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. மனுதாரருக்கு 2 வாரத்தில் பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.