சென்னை, அக். 12- தமிழகத்தின் சிறந்த தொழில்முனை வோருக்கு புகழ்பெற்ற டைகான் சென்னை 2019 விருதுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பிரிவு களில் வெற்றி பெற்றவர்கள், அவர்களின் சாத னைகள் மற்றும் சமுதாய பங்களிப்பிற்காக கவுரவிக்கப்பட்டனர். இதில் சிறப்பு விருந்தி னர்களான சன்மார் குழும துணைத் தலைவர் என்.குமார் மற்றும் கணிதவியல் ஆராய்ச்சி நிறுவனர் இயக்குருமான பேராசிரியர் சி.எஸ். சேஷாத்ரி, ஆகியோர் முன்னிலையில் நடந்த நிகழ்ச்சியில் நாடு முழுவதும் இருந்து தொழில் நிறுவன தலைவர்கள், வெற்றிகரமான தொழில் முனைவோர்கள், வளர்ந்து வரும் ஸ்டார்ட்அப்கள், கல்வியாளர்கள், தொழில் முனைவோர்களாக விருப்பம் உள்ளவர்கள் உள்ளிட்ட 400 பேர் இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதில் டைகான் சென்னை வெற்றியாளர்கள் அறி விக்கப்பட்டனர்.