tamilnadu

img

புயல் நிவாரணப் பணிக்கு ரூ. 3,758 கோடி: மத்திய குழுவிடம் தமிழகம் கோரிக்கை....

சென்னை:
புயல் சேதங்களை ஆய்வு செய்ய வந்துள்ள மத்திய குழுவிடம் புயல் நிவாரணப்பணிக்கு 3 ஆயிரத்து 758 கோடி ரூபாய் வழங்க தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.புயல், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய உள்துறை இணைச் செயலாளர் அசுதோஷ் அக்னிஹோத்ரி தலைமையில் தமிழகம் வந்த 7 பேர் கொண்ட குழுவினர் தலைமைச் செயலாளர் சண்முகத்தைச் சந்தித்துப் பேசினர்.அப்போது புயல், மழை வெள்ளப் பாதிப்புகள் குறித்துப் புகைப்படம், காணொலி ஆகியவற்றின் மூலம் குழுவினருக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.தமிழகம் வந்துள்ள மத்திய குழுவினரிடம் நிவர் புயல் நிவாரணமாக 3 ஆயிரத்து 758 கோடி ரூபாய் வழங்க, தமிழக அரசு கோரிக்கை விடுத் துள்ளது.சென்னை - எழிலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தற்காலிக நிவாரணமாக 650 கோடி ரூபாய் தேவை என கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளதாக தெரிவித்தார்.

;