முதலமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு ஞாயிறன்று (மார்ச் 10) சென்னை, கொளத்தூர், திரு.வி.க நகர் மைதானத்தில் கால்பந்து விளையாட்டுப் போட்டியை அமைச்சர் பி.கே.சேகர்பாபு துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா ராஜன், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.