சென்னை, மார்ச் 21- மதுரையில் நடைபெற்ற பெண் சிசுக் கொலை அதிமுக அரசுக்கு கரும்புள்ளி என்று திமுக உறுப்பினர் கீதாஜீவன் கூறினார். தமிழக சட்டப்பேரவையில் சனிக்கிழமை யன்று (மார்ச் 21) சமூக நலன், மாற்றுத்திற னாளிகள் நலத்துறை, மற்றும் பிற்படுத்தப் பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை மானி யக் கோரிக்கைகள் மீது நடைபெற்ற விவா தத்தின் சுருக்கம் வருமாறு: கீதா ஜீவன்: மதுரை, தேனி மாவட்டங்க ளில் நடந்துள்ள பெண் சிசுக்கொலைக்கு துறைதான் பொறுப்பேற்க வேண்டும். விழிப்பு ணர்வு பிரச்சாரத்திற்கு ஒதுக்கப்படும் நிதியில் 4ல் ஒரு பங்கு மட்டுமே செலவிடப்படுகிறது. எனவே, கர்பிணிகளை கண்காணித்து விழிப்பு ணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு சிசுக் கொலையை தடுக்க வேண்டும். பெண்கள் பாதுகாப்பிற்காக அறி விக்கப்பட்ட 13 அம்ச திட்ட செயலாக்கம் குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். தமிழகத்தில பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. தினசரி ஒரு பெண் குழந்தை பாலி யல் வன்கொடுமைக்கு உள்ளாவதை கண்காணித்து தடுக்க வேண்டும். திருமண உதவி திட்டத்தில் பயனாளி களுக்கு உரியகாலத்தில் தங்கமும், உதவித் தொகையும் வழங்கப்படுவதில்லை. மூவ லூர் ராமாமிர்தம் திருமண உதவி திட்டத் தின் கீழ், தூத்துக்குடி மாவட்டத்தில் 2017 டிசம்பர் மாதத்திற்கு பிறகு ஒருவருக்கு கூட வழங்காமல் இருப்பது ஏன்? எனவே, திருமண உதவி திட்டத்தில் காத்திருப்போருக்கு போர்க்கால அடிப்படையில் தீர்வு காண வேண்டும். திருநங்கைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும். ஒவ்வொரு பணிக் கும் நீதிமன்ற உத்தரவு பெற்றே திருநங்கை கள் பணியில் சேரும்நிலை உள்ளது. எனவே, வேலைவாய்ப்பில் அவர்களக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும். சமூக நலத்துறை அமைச்சர் வீ.சரோஜா: பெண்கள் பாதுகாப்புக்காக சமூக நலத்துறை, காவல்துறை, மாநகராட்சி இணைந்து செயல் படுகிறது. பெண் சிசுக்கொலையை தடுக்க வேண்டும் என்பதுதான் அரசின் நிலைபாடு. மனோன்மணி (அதிமுக): பள்ளி மாண வர்களுக்கு பால் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைச்சர் வீ.சரோஜா: இதுதொடர்பாக ஜெய்பால் நிறுவத்துடன் இணைந்து அரசு ஆய்வு நடத்தி வருகிறது. அறிக்கை கிடைத்ததும் நடவடிக்கை எடுக்கப்படும். முகமது அபுபக்கர் (முஸ்லீம் லீக்): இஸ்லா மியர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடு முழுமயாக சென்றடையவில்லை. இதனை கண்கா ணிக்க தலைமை செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு செயல்படு கிறதா? சிஏஏ எதிர்த்து நடைபெற்ற போராட்டங்களின் போது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெற வேண்டும். நந்தகுமார் (திமுக): தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் 4 கிராம் தங்கம் வழங்கும் போது 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. 8 கிராம் தங்கம் வழங்கும்போதும் 200 கோடி ரூபாய்தான் ஒதுக்கப்படுகிறது. எனவே, பய னாளிகளை குறைக்காமல் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். திருமணம் நடைபெறும் 15 நாட்க ளுக்கு முன்னதாக தங்கத்தை வழங்க நட வடிக்கை எடுக்க வேண்டும். பெண்சிசுக்கொலை நடக்கும் காரணத் தால் நாமக்கல், தருமபுரி, தேனி, திண்டுக் கல் மாவட்டங்களில் ஆண்பெண் விகி தாச்சாரம் குறைந்துள்ளது. எனவே, பெண் சிசுக்கொலையை தடுக்க வேண்டும். இருக்கால்களை இழந்த மாற்றுத்திறனாளி களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கப்படு கிறது. ஒரு கால் இழந்த மாற்றுத்திறனாளி களுக்கும் அந்த மோட்டார் சைக்கிளை வழங்க வேண்டும். அமைச்சர் சரோஜா: ஒரு கால் இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கும் மோட்டார் சைக்கிள் வழங்கும் திட்டம் பரிசீலினையில் உள்ளது. திருமணத்திற்கு 15 நாட்களுக்கு முன்பே தங்கத்தை வழங்க முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று பரி சீலிக்கப்படும். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.