கடலூர், ஜூன் 28- கடலூர் மாவட்டத்தில் விவ சாயத்தை அழித்து பாலைவனமாக் கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி அனைத்து விவ சாயிகளும் மாவட்ட ஆட்சியர் வே. அன்புச் செல்வனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். கடலூர் மாவட்ட விவசாயிகள் குறைகேட்புக்கூட்டம் கடலூரில் வெள்ளியன்று (ஜூன் 28) ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. கூட்டம் துவங்கிய உடன் அனைத்து விவசாயிகளும் ஆட்சித்தலை வரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகள் பேசும் போது, கடலூர் முதல் நாகப்பட்டினம் வரை பெட்ரோலிய ரசாயன மண்டலம் துவக்குவதாக மத்திய, மாநில அரசு கள் அறிவித்துள்ளன.
புதிய எண் ணெய் எடுப்புக் கொள்கையை மத்திய, மாநில அரசு அறிமுகப்ப டுத்தி ஒற்றை அனுமதி என்கிற பெய ரில் கச்சா எண்ணைய் அனுமதியுடன் மீத்தேன், ஷெல்கேஸ் உள்ளிட்டட அனைத்து வகையான எண்ணைய் மற்றும் எரிவாயு பெருட்களை எடுப்பதற்கு வகை செய்துள்ளது. இதனால் கடலூர் மாவட்டத்தில் பரங்கிப்பேட்டை, புவனகிரி, கீரப் பாளையம், குறிஞ்சிப்பாடி, கடலூர் ஆகிய ஒன்றியங்களில் 50க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த திட்டத்தி னால் பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்பதோடு, குடி நீரும் பாதிக்கும் நிலை உருவாகும். எனவே இந்ததிட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் பேசினர். இதற்கு பதிலளித்த ஆட்சியர் கடலூர் மாவட்டத்தில் இந்த திட்டம் துவங்குவது குறித்த எந்த தகவலும் மாவட்ட நிர்வாகத்திற்கு வரவில்லை. அனுமதி கோரி யாறும் மாவட்ட நிர்வாகத்திற்கு மனு செய்யவில்லை. மாநில அரசும் விவ சாயிகளின் அனுமதி பெற்ற பிறகே எந்த திட்டத்தையும் செயல்படுத்து வோம் என்று கூறியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் விவசாயிகளின் கருத்துகளை கேட்காமல் எந்ததிட்ட மும் அமல்படுத்தப்படமாட் டாது. இந்த திட்டம் கடலூர் மாவட்டத்தில் வருவதற்கான வாய்பில்லை எனவே போராட்டத்தை கைவிட்டு கூட்டம் நடத்த ஒத்துழைக்க வேண்டும் என்றார். விவசாயிகள் சங்க மாவட்டச் செய லாளர் ஜி.மாதவன் பேசும் போது ஹைட்ரோகார்பன் எண்ணை கிணறு தோண்ட கடலூர் மாவட்டத்தில் வேதாந்தா நிறுவனத்திற்கும், மத்திய அரசின் ஓஎன்ஜிசி நிறு வனத்திற்கும் அனுமதி வழங்கி உள்ளது. அரசிதழிலும் வெளி வந்துள்ளது. ஆரம்ப கட்டப் பணியை அவர்களும் தொடங்கியுள்ளனர் என்றார். இதற்கு பதிலளித்த ஆட்சி யர் இதுவரையில் இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தை யாறும் அணுக வில்லை என பதிலளித்தார். உங்க ளின் எதிர்ப்பை மாநில அரசிற்கு இந்த கூட்டத்தின் வாயிலாக தெரி யப்படுத்துகிறேன் எனவும் கூறினார்.