திருவண்ணாமலை, பிப். 23- குடிநீர் தொட்டி அமைக்கக் கோரி விவசாயிகள் பானைகளை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலையை அடுத்த நல்ல வன் பாளையம் சமுத்திரம் கிராமத்தில் இடிக்கப்பட்ட குடிநீர் மேல் நீர் தேக்க தொட்டியை புதிதாக அமைக்க வேண்டும், ஊராட்சி நிதியை முறைகேடு செய்த ஊராட்சி மன்ற நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பழங்குடி இருளர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு அரசால் வழங்கப்பட்ட 16 இலவச வீட்டு மனை பட்டாவை அரசு கணக்கில் ஏற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பானை உடைப்பு போராட்டம் நடைபெற்றது. கிளைத் தலைவர் கோதண்டன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், மாவட்டச் செயலாளர் எஸ்.பலராமன், நிர்வாகிகள் பன்னீர்செல்வம், அயூப்கான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.