tamilnadu

img

சட்ட நகலை எரித்து விவசாயிகள் போராட்டம்

மத்திய அரசு அத்தியாவசிய பொருட்களில் இருந்து உருளைக்கிழங்கு, வெங்காயத்தை நீக்கி இயற்றியுள்ள சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி கடலூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை உள்ளிட்ட வட மாவட்டங்களின் பல இடங்களில்  தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சட்ட நகல் எரிப்பு போராட்டம் புதனன்று (ஜூன் 10) நடைபெற்றது.