tamilnadu

சென்னை விரைவு செய்திகள்

வயல் வெளியில் கள்ள நோட்டுகள் பறிமுதல் கடலூர்

, மார்ச் 31- திட்டக்குடியில் வயலில் பதிக்க வைக்கப்பட்டிருந்த கள்ள நோட்டுகள் மற்றும் கள்ள நோட்டு அடிக்க பயன்படும் உபகரங்களை போலீசார் பறிமுதல்  செய்தனர். கடலூர் மாவட்டம், திட்டக்குடி அடுத்த அதர்நத்தம்  கிராமத்தில் விசிக நிர்வாகி செல்வம் ( 39 ). அவரது விவசாய  நிலத்தில் ஒரு கும்பல் செட் அமைத்து கள்ள நோட்டு அடிக்கும் பணியில்  ஈடுபட்டு வருவதாக ராம நத்தம் காவல் துறைக்கு கிடைத்த ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பெயரில் திங்க ளன்று (மார்ச் 31) திடீரென போலீசார் சோதனை செய்த னர்.அப்போது 85 ஆயி ரம் மதிப்பில் 500 ரூபாய் கள்ள நோட்டு பறி முதல் செய்யப்பட்டது. அங்கி ருந்து செட்டில் வாக்கி டாக்கி, லேப்டாப், ஏர்கன், பிஸ்டல், கவுண்டிங் மெஷின், பிரிண்டிங் மெஷின், பேப்பர் பண்டல், போலீஸ் யூனிபார்ம், ஆர்பிஐ முத்திரை உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றி தீவிர விசா ரணை மேற்கொண்டு வரு கின்றனர். தப்பி ஓடிய கும்பலை தேடி வருகின்ற னர்.

கொலைக்கு பழிவாங்க சதித்திட்டம் வீட்டில் வெடிகுண்டுகள் பறிமுதல் புழல்

, மார்ச் 31- ஆதம்பாக்கம் வாணுவம்பேட்டை யில் கடந்த 26 ஆம் தேதி பார்த்திபன் என்பவர் வீட்டின் அருகே புதைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு ஒன்றை ஆதம்பாக்கம் போலீசார் பறிமுதல் செய்தனர். இதில் பார்த்தி பன் (27), ராபின்சன் (23) ஆகிய இருவரை கைது செய்து விசாரித்தனர். அதில், சோழவரம் அடுத்த ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த வினித் என்பவர் நாட்டு வெடி குண்டை கொடுத்து வைத்ததாக தெரிவித்தனர். இதைய டுத்து இருவரை சிறையில் அடைத்து பார்த்திபன் அளித்த தகவலின் பேரில் ஆதம்பாக்கம் தனிப்படை போலீ சார் ஆந்திராவில் பதுங்கி இருந்த வினித் (23), அவரது கூட்டாளி முருகன் (20) ஆகிய இருவரை கைது செய்த னர். அவர்களது வீடு அமைந்துள்ள சோழவரம் ஆத்தூர் அழைத்து வந்தனர். அங்கு இருவரும் மறைத்து வைத்தி ருந்த 9 நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்தனர். விசார ணையில், கடந்தாண்டு சரித்திர பதிவேடு குற்றவாளியான தனது தம்பி தனுஷை ஒரு கும்பல் வெட்டி கொலை செய்த தாகவும், தக்க சமயம் பார்த்து தம்பி கொலைக்கு பழி தீர்க்க நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கி வைத்திருந்த தாகவும் வினித் கூறியுள்ளார். பிறகு வினித்தை ஆதம் பாக்கம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து சோழவரம் போலீசார் முருகனிடம் விசாரித்து வருகின்றனர்.

தந்தை-மகன் பலி

கிருஷ்ணகிரி, மார்ச் 31- சூளகிரி அருகே மாரண்டஅள்ளி ஊராட்சி நஞ்சுபுரம் கிராமத்தில் கட்டிட மேஸ்திரி முனிரத்தினம் தன் 11 வயது மகன் சந்தோஷ்குமாருடன் குளிக்க சென்று தண்ணீர் தொட்டிக்குள் இறங்கினார்.12 அடி ஆழம் உள்ள நிலையில் சிறிது நேரத்தில் தண்ணீரில் மூழ்கி தந்தை,மகன் இருவரும் உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்த சூளகிரி காவல்துறையினர் உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.