tamilnadu

மாரிதாசுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீட்டிப்பு

சென்னை, ஆக. 12- நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு எதிராக செய்தி களை வெளியிட யுடியூபர் மாரிதாசுக்கு விதிக்கப்பட்ட  இடைக்கால தடையை சென்னை உயர்நீதிமன்றம் நீட்டித்துள்ளது. நியூஸ் 18 தொலைக்காட்சி மற்றும் பணியாற்றுகிறவர்கள் குறித்து இந்துத்துவா பிரமுகர் மாரிதாஸ் அவதூறான வீடி யோக்களை வெளியிட்டார். அதற்கு ஆதாரமாக மோசடி யான மின்னஞ்சல்களையும் வெளியிட்டார். அவதூறு செய்திகள் வெளியிட்ட மாரிதாசிடம் 1.5 கோடி  ரூபாய் நஷ்டஈடு கேட்டு நியூஸ் 18 தொலைகாட்சி வழக்கு  தொடர்ந்திருந்தது. இதனை விசாரித்த சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி சி.வி.கார்த்திகேயன், நியூஸ் 18 தொடர்பாக வும், வேறு எந்த வீடியோவும் வெளியிட மாரிதாசுக்கு தடை  விதித்து உத்தரவிட்டிருந்தார். அந்த வழக்கு புதனன்று (ஆக.12) மீண்டும் விசாரணைக்கு  வந்தது. அதனை விசாரித்த நீதிபதி, தடையை நீட்டித்தும், நியூஸ் 18 குறித்து செய்தி வெளியிட வேண்டும் என்றால் 48  மணி நேரத்திற்கு முன்பாக அந்நிறுவனத்திற்கு தெரியப்ப டுத்த வேண்டும். அவர்கள் தரும் விளக்கத்தை சேர்த்தே வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டார். வழக்கு விசாரணை  மீண்டும் ஆகஸ்ட் 25 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.