tamilnadu

பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில்கள் ரத்து

சென்னை, ஜன.4- பராமரிப்பு பணி காரணமாக காட்டாங் கொளத்தூர்  - கூடுவாஞ்சேரி இடையே மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே வரும் 7, 10, 11, 14, 17 ஆகிய தேதிகளில் காலை 10.08, 10.56 மணிக்கு இயக்கப்படும் ரயில் கூடுவாஞ்சேரி - செங்கல்பட்டு இடையேயும், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையேயும் ரத்து செய்யப்படுகிறது. அதேபோல்  11.48 மணிக்கு இயக்கப்படும் ரயில் தாம்பரம் - செங்கல்பட்டு இடையேயும், செங்கல்பட்டு - சென்னை கடற்கரை இடையே காலை 11.30 மணிக்கு இயக்கப்படும் ரயில் செங்கல்பட்டு - கூடு வாஞ்சேரி இடையேயும் ரத்து செய்யப்படுகிறது. திருமால்பூர் - சென்னை கடற்கரை இடையே காலை 10.40 மணிக்கு இயக்கப்ப டும் ரயில் திருமால்பூர் - கூடுவாஞ்சேரி இடையே யும், செங்கல்பட்டு - சென்னை கடற்கரை இடையே பிற்பகல் 12.20 மணிக்கு இயக்கப்படும் ரயில் செங்கல் பட்டு - தாம்பரம் இடையே யும் ரத்து செய்யப்படுகிறது. மேலும், பட்டாபிரம் மிலி டரி சைடிங் இ-டிபார்ட் மெண்ட் - மூர்மார்க்கெட் இடையே 7ம் தேதி காலை 3.20 மணிக்கு இயக்கப்படும் ரயில் பிடிஎம்எஸ் இ-டி பார்ட்மெண்ட் - ஆவடி இடை யேயும் ரத்து செய்யப்படு கிறது. மூர்மார்க்கெட் - பட்டா பிரம் மிலிடரி சைடிங் இ- டிபார்ட்மெண்ட் இடையே 6ம் தேதி இரவு 10.35 மணிக்கு இயக்கப்படும் ரயில் ஆவடி - பிடிஎம்எஸ் இ-டிபார்ட் மெண்ட் இடையேயும், வேளச்சேரி - பட்டாபிரம் மிலிடரி சைடிங் இ-டிபார்ட் மெண்ட் இடையே 6ம் தேதி இரவு 10.30 மணிக்கு இயக்கப்படும் ரயில் பட்டா பிரம் - பிடிஎம்எஸ் இடையே ரத்து செய்யப்பட்டு, ஆவடி - திருநின்றவூர் இடையே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

;