புதிய கல்விக்கொள்கையினை எதிர்த்து, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் ஆகஸ்ட் 23 ஆம் தேதி திருச்சியில் ‘கல்வி உரிமை’ மாநாடு நடைபெறுகிறது. இம்மாநாட்டின் நோக்கங்களை பொதுமக்கள் மத்தியில் எடுத்துச் செல்லும் வகையில் புதுச்சேரி முழுவதும் தமுஎகச சார்பில் பிரச்சாரம் நடைபெற்றது. பிரதேசத் தலைவர் அரிகிருஷ்ணன் தலைமை தாங்கினார். முனைவர் பஞ்சாங்கம் பிரச்சாரத்தை துவக்கி வைத்தார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் சு.ராமச்சந்திரன் , அரசு ஊழியர் சம்மேளன கவுரவத்தலைவர் சி.எச்.பாலமோகனன், தலைவர் பிரேமதாசன், தனித் தமிழ் இயக்கத் தலைவர் தமிழ்மல்லன், பிரதேசச் செயலாளர் உமா அமர்நாத், மாநிலக்குழு உறுப்பினர் சண்முகசுந்தரம் மற்றும் எழுத்தாளர்கள் உள்ளிட்டதிரளானோர் பங்கேற்றனர்.