சென்னை, ஜூலை 18- தமிழ்நாட்டில் 2 கோடியே 21 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் உள்ள னர். இவர்களில் 1 கோடியே 90 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் ரேசன் கடைகளில் துவ ரம் பருப்பு, சமையல் எண்ணெய்யை (பாமாயில்) குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகிறது.
ஏழை எளியவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு துவரம் பருப்பு, பாமாயிலை வெளிச்சந்தை யில் கொள்முதல் செய்து அவற்றை, கடந்த 2007 ஏப்ரல் 15 முதல் துவரம் பருப்பு ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், சமையல் எண்ணெய் ஒரு லிட்டர் 25 ரூபாய்க்கும் கொடுத்து வருகிறது. இத னால் ஏழைகள், நடுத்தர மக்கள் மிக வும் பயன் அடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 2 மாதங் களாக ரேசன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் கிடைக்கவில்லை. மக்களவைத் தேர்தல் காரணமாக டெண்டர் அறிவிக்க முடியாததால், துவ ரம் பருப்பு, பாமாயிலை கொள்முதல் செய்ய முடியவில்லை. இந்த பொருட் களை விரைவில் வழங்குவோம் என்று தமிழ்நாடு அரசு கூறியிருந்தது.
இந்நிலையில் அடுத்த 2 மாதத்திற்கு தேவையான பாமாயில், துவரம் பருப்பு கொள்முதல் செய்ய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் டெண்டர் கோரி உள்ளது. பாமாயில், துவரம் பருப்பு கொள்முதல் டெண்ட ருக்கான ஆவணங்களை சமர்பிக்க 27-ஆம் தேதி கடைசி நாள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
ரேசன் கடையில் பருப்பு, பாமா யில் தடையின்றி விநியோகிக்கும் வகை யில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொது விநியோகத் திட்டத்தில் பருப்பு, பாமாயில் விநியோகம் நிறுத்தப்பட உள்ளதாக தகவல் பரவிய நிலை யில் கொள்முதல் செய்ய டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. விரைவாக கொள்முதல் செய்து பொதுமக்க ளுக்கு விநியோகம் செய்யும் வகையில் குறுகிய கால டெண்டர் விடப்பட்டுள்ளது.