tamilnadu

img

கழுகுகளுக்கு ஆபத்தாகும் மருந்துகள்

சென்னை, ஜூன் 11- தமிழகத்தில் கழுகு கள் அதிகமாக உள்ள மாவட்டங்களாக கோ வை, நீலகிரி, திருப்பூர் ஈரோடு ஆகிய மாவட்ட ங்கள் உள்ளன. இங்கு, இறந்து போன கால் நடைகளின் இறைச்சியை உண்ணும் கழு குகள் இறந்து போவது அதிகரித்து வரு கிறது. இதற்கு கால்நடையின் உடலில் கலந்திருக்கும் தடைசெய்யப்பட்ட மருந்துப் பொருட்கள் ஒருகாரணமாக இருப்பது தெரியவந்துள்ளது.  இந்நிலையில், வன விலங்குகள் ஆர்வலர் சூரியகுமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்  செய்தார். இந்த மனு, பொறுப்பு தலைமை நீதிபதி ஆர். மகாதேவன், நீதிபதி முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கழு குகளை பாதுகாப்பதற் காக குறிப்பிட்ட மருந்துகளை தடை செய்வது குறித்து ஒன்றிய அரசுதான் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது. எனினும், இந்த மருந்து களை கால்நடைகளுக்கு பயன்படுத்த வேண்டாம் என விவசாயிகளுக்கு ஏற் கெனவே அறிவுறுத்தியுள்ளதாகவும் தமி  ழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி கள் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.