tamilnadu

img

கிண்டி ஐடிஐ மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு

கிண்டி ஐடிஐ மாணவர்கள் மத்தியில்  போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு

சென்னை, ஜூன் 27- சர்வதேச போதைப்பொருள் விழிப்பு ணர்வு தினத்தை முன்னிட்டு  சென்னை கிண்டியில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ஆஷா நிவாஸ் தொண்டு நிறுவனத்தின் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நிலையத்தின் இயக்குநர் கே.சசிதரன், ஆசிரியர்கள்  ஆண்டாள், என்.ரமேஷ் ஆஷா நிவாஸ் தொண்டு நிறுவனத்தின்  இயக்குநர் டாக்டர் குரியன் தாமஸ்,துணை இயக்குநர் சூசை ஆண்டனி உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். போதையில்லா பாதையில் செல்வோம் என்ற தலைப்பில் சிற்பி கலைக்குழுவினர் வீதி நாடகம்  வழியாக விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடத்தினர். சமுதாய வளர்ச்சி அலுவலர்கள் மேரி கேத்தலின், வி.குமார் ஆஷாநிவாஸ் பணியாளர்கள் மாணவர்கள் இதில் கலந்துகொண்டனர்.