tamilnadu

img

சிபிஎம் கிளைச் செயலாளரான சிற்பக்கலைஞருக்கு டாக்டர் பட்டம்

சென்னை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச்செயலாளரான எம்.ராஜேஷின் சிற்பக்கலை திறமையை அங்கீகரித்து உலகத்தமிழ் பல்கலைக்கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. எம்.ராஜேஷ் சிதம்பரம் நகரில் சிற்பங்கள் செதுக்கும் ஸ்தபதி. உலோகங்களில் அவர் செதுக்கிய சிற்பங்கள் அமெரிக்கா, இலங்கை, தாய்லாந்து, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு வாங்கிச்செல்லப்பட்டுள்ளது. நேர்த்தியான,கலைநுணுக்கமிக்க சிற்பங்களை செதுக்கக்கூடிய அவரது சிற்பக்கலை திறமையை அங்கீகரித்து,பாராட்டி அமெரிக்காவில் ஹவாய் நகரில் இயங்கிவரும் உலகத்தமிழ் பல்கலைக்கழகம் சென்னையில் நடைபெற்ற விழாவில் எம்.ராஜேஷுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. ராஜேஷ் சிதம்பரம் நகரத்தில் 15-வது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச்செயலாளராக செயல்பட்டு வருகிறார்.தற்பொழுது கட்சியின் கடலூர் மாவட்டக்குழுவிற்காக மாமேதை காரல் மார்க்ஸ் சிலையை செய்துவருகிறார். டாக்டர் பட்டம் பெற்றுள்ள ராஜேஷை கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் உட்பட பலரும் வாழ்த்திப் பாராட்டினர்.