tamilnadu

img

ஆளுநர் மாளிகை நோக்கி திமுக பேரணி.... கனிமொழி உள்ளிட்ட 191 பேர் மீது வழக்குப் பதிவு

சென்னை:
ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடத்திய திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி உள்ளிட்ட 191 பேர் மீது, 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட் டுள்ளது.

ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமையைக் கண் டித்து திமுக மகளிரணி சார்பில் ஆளுநர் மாளிகையை நோக்கி மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி நடைபெற்றது.

பெண்களுக்கு நீதி கிடைக்க...
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத் தார். அப்போது உரையாற்றிய அவர், “பெண்களுக்கு எதிராக அதிக பாலியல் குற்றங்கள் நடந்த மாநிலம் எது என்று பார்த்தால் அது உத்தரப் பிரதேசம்” என்றார்.தமிழகத்தில் நாம் பொள்ளாச்சி சம்பவத்தை மறக்க;f கூடாது. மறக்கவும் முடியாது. இதில் நீதி, நியாயம் கிடைக்கவில்லை, காரணம் ஆளும் கட்சியினருக்கு அதில் தொடர்பு உள்ளது என்றும் அவர் கூறினார்.இந்நிலையில், திமுகவின் ட்விட்டர் பக்கத்தில், ”திமுக ஆட்சிக்கு வந்தவுடன், தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங் களை விரைந்து விசாரித்துத் தீர்ப்பளிக்க ஏதுவாக மாவட்டந்தோறும் சிறப்புத் தனி நீதிமன்றங்கள் அமைக் கப்படும்” என்று ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.முன்னதாக  பேசிய கனிமொழி, “உத்தரப் பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிய குற்றவாளிகள் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் யார் பெண்களை பாதுகாப்பது என கேள்வி எழுப்பினார்.

பாஜக ஆட்சியில் பெண் களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன.பாரத் மாதா கி ஜெய் என்று கூறும் உத்தரப் பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாகி விட்டது என்றும் கனிமொழி தெரிவித்தார்.இந்த போராட்டத்தில் பொதுச்செயலாளர் துரைமுருகன் துணை பொதுச் செயலாளர் க. பொன்முடி, ஏ.வ.வேலு உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்இந்த பேரணியில் பங் கேற்ற கனிமொழி உள்ளிட்டவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப் பட்டனர்.இந்நிலையில், கனிமொழி உள்ளிட 191 பேர் மீது சட்ட விரோதமாக கூடுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், தொற்று நோய் பரவல் தடுப்புச் சட் டத்தை மீறுதல் உள்ளிட்ட 5 
பிரிவுகளின் கீழ் கிண்டி துறையினர் வழக்குப் பதிவு செய் துள்ளனர்.