பழங்குடியின மக்களுக்கு அடிப்படை வசதிகள் கோட்டாட்சியர் பல்லவி வர்மா வாக்குறுதி
திருவண்ணாமலை, ஜூன் 26- வந்தவாசி தாலுகாவில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு உடனடியாக அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தரு வதாக கோட்டாட்சியர் பல்லவி வர்மா உறுதியளித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம், வந்த வாசி தாலுகாவில் தென் சேந்தமங்கலம், பிருதூர், மருதாடு, அதியங்குப்பம், தெள்ளூர், பாதிரி, விளாங்காடு, சிவனம், தேசூர், எஸ். மேட்டூர் உள்ளிட்ட பகுதி களில் ஏராளமான இருளர் பழங்குடி மற்றும் காட்டுநாயக்கன் மக்கள் வசித்து வரு கின்றனர். அவர்களுக்கு அடிப்படை தேவை களான வீட்டுமனைப்பட்டா, மாணவர் கல்விக்கான ஆதார், சாதிச்சான்று உள்ளிட்டவை இல்லாமல் தவித்து வரு கின்றனர். இந்நிலையில், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் வியாழனன்று (ஜூன் 26) பழங்குடியின மக்கள் வந்தவாசி பழைய பேருந்து நிலையம் அருகில் இருந்து வட்டாட்சியர் அலுவலகம் வரை பாரம்பரிய பொருட்களுடன் ஊர்வலமாக சென்றனர். அங்கு கோட்டாட்சியர் பல்லவி வர்மாவிடம் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி மனு அளித்தனர். அந்த கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்ட கோட்டாட்சியர் இரண்டு நாட்க ளில் மாணவர்களுக்கான ஆதார் அட்டை சிறப்பு முகாமும், ஒரு மாதத்திற்குள் வீட்டு மனை பட்டாவும் வழங்குவதாக உறுதி யளித்தார். இந்த ஊர்வலத்திற்கு சுகுணா தலைமை தாங்கினார். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் மற்றும் தமிழ்நாடு பழங்குடியினர் ஆன்றோர் மன்ற உறுப்பினர் இரா.சரவணன், மாவட்ட துணை செயலாளர் ரேணுகா, சிபிஎம் வட்டச் செயலாளர் அப்துல் காதர், விவசாயிகள் சங்க நிர்வாகி ந. ராதா கிருஷ்ணன், கரும்பு சங்க மாநில குழு உறுப்பினர் பெ.அரிதாசு மற்றும் மலை வாழ் மக்கள் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.