tamilnadu

img

தொழில்நுட்ப மேம்பாட்டு நிதியை பிளாஸ்டிக் தொழில்களுக்கும் வழங்கக்கோரிக்கை

சென்னை,ஆக.18- ஜவுளி தொழில்களுக்கு வழங்கப்படும் தொழில்நுட்ப மேம்பாட்டு நிதியை போன்று பிளாஸ்டிக் தொழில்களுக்கும் ஒன்றிய அரசு  வழங்கவேண்டும் என்று பிளாஸ்டிக் தொழில் துறையினர் கேட்டுக்கொண் டுள்ளனர். சென்னையில் பிளா ஸ்டிக் தொழில் வளர்ச்சிக் கான 5-ஆவது தொழில்நுட்ப மாநாட்டையொட்டி செய்தியாளர்களிடம் பேசிய அகில இந்திய  பிளாஸ்டிக் உற்பத்தி யாளர்கள் சம்மேளனத்தின் (ஏ.ஐ.பி.எம்.ஏ) நிர்வாகி அரவிந்த் மேத்தா இதனை தெரிவித்தார்.  “இந்திய பிளாஸ்டிக் தொழில்துறை விரைவான வளர்ச்சியைக் காணும் என்றும் 2027-ஆம் ஆண்டிற்குள் கிட்டத்தட்ட மூன்று மடங்கு அளவுக்கு,  அதாவது ரூ. 10 லட்சம் கோடி அளவிற்கு வர்த்தகத் தைத் தொடும் என்றும் அவர் கூறினார். இந்தியாவில் தயாரிப்போம் முயற்சிக்கு ஆதரவு அளிப்பதாக கூறிய அவர், பிளாஸ்டிக் பொருட்களை அதிகளவில் இறக்குமதி செய்வதை தவிர்க்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். முன்னதாக, வரவேற் புரை ஆற்றிய ஏ.ஐ.பி.எம்.ஏ.-வின் தலைவர் மயூர்  டி. ஷா, இந்திய பிளாஸ்டிக்  தொழில் துறை உலகளா விய பிளாஸ்டிக் விநியோக  மையமாகவும் உருவெ டுத்து, தன் திறன்களை நிரூபித்துள்ளது என்றார்.  மொத்தம் ரூ. 37,500 கோடி மதிப்புள்ள இறக்குமதி செய்யப்படும் 553 பிளா ஸ்டிக் பொருட்களை இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய ஏ.ஐ.பி.எம்.ஏ கண்டறிந்துள்ளது என்றும் அவர் கூறினார். இதனால் கூடுதலாக 5லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும் அவர் தெரிவித்தார்.