tamilnadu

img

டிச.8 விவசாயிகள் போராட்டத்திற்கு சிஐடியு ஆதரவு..

சென்னை:
டிசம்பர் 8 அன்றுநடைபெறும்  விவசாயிகளின்நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டத்திற்கு சிஐடியு ஆதரவு தெரிவித்துள்ளது.இதுகுறித்து சிஐடியு மாநிலப் பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன் வெளியிட்டுள்ள அக்கையில் கூறியிருப்பதாவது:மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி  கடந்தபல தினங்களாக லட்சக்கணக்கான விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும் தலைநகர் தில்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திவருகின்றனர்.

அரசுத் தரப்பில் பேச்சுவார்த்தை என்று பெயரளவிற்கு சொல்லி வருகிறதே தவிர விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் சட்டங்களை திரும்பப்பெற மறுத்து வருகிறது. விவசாயிகளின் பிரச்சனையில் மோடி தலைமையிலான பாஜக அரசின் பிடிவாதமான அணுகுமுறைக்கு எதிராகநாடு முழுவதும் அரசியல்கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் ஜனநாயக அமைப்புகள் ஆதரவு இயக்கங்களை நடத்தி வருகின்றன.  இந்த நிலையில் விவசாயஅமைப்புகள் டிசம்பர் 8 ஆம்தேதி நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு சிஐடியு முழுஆதரவை தெரிவித்துக்கொள்கிறது.தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டத்தில்  சிஐடியுவின் அனைத்து சங்கங்களும் பங்கேற்று வெற்றிபெற செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;