சென்னை, ஏப். 20- வடசென்னை அனல்மின் நிலையத்தில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக 600 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
வடசென்னை அனல்மின் நிலையத்தில் 2 நிலைகள் உள்ளன. முத லாவது நிலையில் உள்ள 3 அலகுகளில் தலா 210 மெகாவாட்டும், இரண்டா வது நிலையில் உள்ள 2 அலகுகளில் தலா 600 மெகாவாட் மின் உற்பத்தி யும் செய்யப்படு கின்றன.
இந்நிலையில் இரண்டாவது நிலையில் உள்ள இரண்டாவது அலகில் கொதிகலன் பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு உற்பத்தி செய்யப்பட்டு வந்த 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பழுதை சீரமைக்கும் பணி யில் அனல்மின் நிலைய ஊழியர்கள் ஈடுபட்டுள்ள னர்.