மிக்ஜம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ரூ.10 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர் பி.சம்பத், மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ் ஆகியோர் புதனன்று சந்தித்து இந்நிதியை வழங்கினர்.