tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சிபிஎம் ஆர்ப்பாட்டம்: கி.வீரமணி பங்கேற்பு
சென்னை,பிப்.6- கேரளாவில் மக்கள் நல அரசான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசின்  மீது ஒன்றிய அரசு தொடுத்து வரும் தாக்குதலைக் கண்டித்தும், மாநில உரிமைகள் மற்றும் கூட்டாட்சி கோட்பாட்டைப் பாதுகாக்கும் வகையில் பிப். 8 அன்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாடு முழுவதும் தர்ணா போராட்டம் நடத்துகிறது. அதையொட்டி தமிழ் நாட்டில் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது

திருச்சியில் கி.வீரமணி
மாநில உரிமைகளை காக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருச்சி யில் பிப்.8 அன்று நடத்தும் ஆர்ப்பாட் டத்தில் திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி கலந்து கொள்கிறார். மற்ற  மாவட்டங்களில் நடைபெறும் ஆர்ப்பாட் டங்களில் திராவிடர் கழகத் தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள  வேண்டும் என்று அந்த கட்சியின் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

ஒரே நாளில்  20 மாவட்டங்களில் 1,021 மருத்துவர்கள் பணி நியமனம்

சென்னை,பிப்.6- தமிழ்நாட்டில் மருத்துவத் துறை யில் காலியாக உள்ள மருத்துவர் பணி யிடங்களை நிரப்புவதற்காக தேர்வுத் துறை மூலம் 1,021 புதிய மருத்துவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். 

தேர்வு செய்யப்பட்ட இவர்கள் அனைவரும் 20 மாவட்டங்களில் உள்ள  அரசு மருத்துவமனைகளில் நியமிக்கப் பட்டுள்ளார்கள். புதிய மருத்துவர் களுக்கு பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி  மருத்துவர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக கூட்ட அரங்கில் செவ்வாயன்று (பிப்.6) நடந்தது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி னார்.

நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, துணை வேந்தர் மரு.நாராயணசாமி, பொது சுகாதாரத்துறை இயக்குநர் மரு. செல்வ விநாயகம், மரு. சங்கு மணி  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சென்னையில் 
தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை

சென்னை,பிப்.6- மக்களவைத் தேர்தலுக்கான நடவடிக்கைகளில் தேர்தல் ஆணை யம் தீவிரம் காட்டி வருகிறது. 

தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பு  அனைத்து கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன. இதனால் நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தின், துணை தேர்தல் ஆணையர் அஜய் பதூ தலைமையில், தேர்தல் ஆணைய முதன்மை செயலாளர் மல்லே மாலிக் ஆகியோர் செவ்வாயன்று (பிப்.6) சென்னை வந்தனர்.

இதையடுத்து சென்னை தலை மைச் செயலகத்தில் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா  சாகுவுடன் ஆலோசனை நடத்தினர். பிறகு, வருமான வரித்துறை, காவல் துறை, வருவாய் புலனாய்வுத் துறை, சுங்கத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை களின் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

தங்கம் விலை சவரனுக்கு  ரூ.160 குறைவு

சென்னை,பிப்.6- தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாத  தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்து டன் காணப்படுகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது.

மதிவாணன்-மெர்லினா ஜாமீன் மனு தள்ளுபடி

சென்னை,பிப்.6- பணிப்பெண்ணை சித்ரவதை செய்து துன்புறுத்தியதாக ஆண்டோ  மதிவாணன் மற்றும் மெர்லினா ஆகியோரை நீலாங்கரை அனைத்து  மகளிர் காவல்துறையினர் ஆந்திரத்தில் கைது செய்தனர். இருவரும்  வரும் பிப்.9 வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள னர். இந்நிலையில் இருவருக்கும் ஜாமீன் கோரி சென்னை முதன்மை  அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். 

இந்த மனுவின் விசாரணை என்பது அப்போது காவல்துறை தரப்பில்  ஆஜரான மாநகர சிறப்பு வழக்குரைஞர் எம்.சுதாகர், பாதிக்கப்பட்ட  பெண் அளித்த புகார் தொடர்பாக இன்னும் விசாரணை நடைபெற்று வருவ தாகக் கூறினார். இந்த நிலையில், இருவரின் ஜாமீன் மனுவையும் தள்ளு படி செய்துசென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் செவ்வாயன்று உத்தர விட்டுள்ளது.