திருத்தணி,டிச.31- மக்கள் கோரிக்கை வலியுறுத்தி கொடுக்கப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காத திருத்தணி வருவாய் துறை அதி காரியை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியன் வட்டச் செயலாளர் அந்தோணி தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தின் நிறைவில் அரசு அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தை முடிவில் செருக்கனூர் ஆதி திராவிட மக்களுக்கு பொங்கல் திருநாளில் பகுதிநேர ரேஷன் கடை திறக்க உறுதி அளிக்கப்பட்டது. நல்லாட்டூர் ஆதிதிராவிடர் 7 குடும்பங்களுக்கு குடிமனை பட்டா வழங்கப்பட்டது. அடுத்த மாதம் 3 ம் தேதி பட்டா வழங்கும் திருவிழா நடைபெற உள்ளதால் பல்வேறு கிராமங்களுக்கு பட்டா வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று உறுதியளித்தனர். மேலும் மற்ற கிராமங்களுக்கு பொங்கல் கழித்து பட்டா வழங்குவதாக உறுதி அளித்தனர்.
செருக்கனூர் காலனிக்கு சுடுகாட்டு பாதையை உடனடியாக அமைத்துதரவும் பகத் நகர், பங்களா மேடு, கோரமங்கலம், பெரிய கடம்பூர், வி கே ஆர் புரம் உள்ளிட்ட கிராமங்களுக்கு நிலுவையில் உள்ள பட்டாக்களை பொங்கல் கழித்து தரு வதாகவும் அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
முன்னதாக மாவட்டக் குழு உறுப்பினர் அப்சல் அகமத் வட்டக் குழு உறுப்பி னர்கள் பாலாஜி கரி முல்லா பிருந்தாவனம் சின்னதுரை ஜெய வேல் ஆகியோர் பேசினர்.